என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

Tuesday, April 21, 2009

காதல், கானகம் - பகுதி 29

கானகத்திலேயே வாழ்பவர்களை ஒரு
கணம் கண்ணிமைக்காமல்
பார்த்துவிட்டு
படபடப்பாய்ச் சொன்னாள்
வணக்கம்.

இவள் பெயர் மதி
இரண்டு வாரத்தில்
எனது மனைவி.
எப்பொழுதும் என் காதலி.

வணக்கம்மா என்ற
வார்த்தைகள்
அன்பு தாங்கி வந்து
அவள் காதுகளைத் தொட்டது.

அய்யா பேரு அறிவுமதியில
அளவா பாதிப் பேரு
உங்க பேரா இருக்கு
உண்மையாவே அவருல
சரி பாதியா நீங்க
சந்தோசமா வாழணும்
என்ற இம்ரானின் சொற்களால்
எதிர்பாரமல் வந்த சொந்தங்கள்
இவர்கள் என மதி
இனம்புரிந்து கொண்டாள்.

அய்யா உங்கள பத்தி
அளவில்லாம பேசுவாரு.
உங்களுக்கு காய்ச்சல்னு
உப்பு போட்டு இரண்டு நாள் வெறும்
சுடுகஞ்சி மட்டுமே குடிச்சவரு
சுலபத்துல இவர மாதிரி
ஆள பாக்குறதே
ஆச்சரியம் என்றான் சாமி.

தவமிருந்து கடவுளைக் கண்டு
வரமொன்று கேட்க வாயின்றிப்
போன பக்தன் போல்
புளங்காகிதம் அடைந்தாள்.
அள்ளி அவனை
அணைத்து முத்தமிட
எண்ணியும் முடியாதவளாய்
எத்தனித்து பாசப்
பார்வை ஒன்று
பீய்ச்சினாள்.

அதில் புதைந்திருந்த
அர்த்தங்கள் ஆயிரமாயிரம்.
அத்தனையையும் உள்வாங்கி பின்
அமைதியான அனுபவப்
பார்வை காட்டினான் காதல்.

பயணத்திற்குத் தயாரா?

போலாம் அய்யா
பொழுது விடிஞ்சதுல இருந்தே
புறப்பட்டு இருக்கோம்.

இங்கே இருந்து
இரண்டு கிலோமீட்டர் - அங்கே
புலி, சிங்கம் ஒன்றும் இருக்காது
புள்ளிமானும், காட்டு முசலும் இருக்கும்.
அங்கதான் இன்னைக்கு மூலிகை
அறுக்கணும், நீங்களும் வாங்க என்றனர்.



(தொடரும்...)

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

0 comments:

இங்கே கண்தடம் பதித்தவர்கள்

நாட்காட்டி

தமிழ்வெளி

More than a Blog Aggregator

தமிழ் கணிமை

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

Thiratti.com

அதிகாலை

Instant dynamic Tamil News Portal