என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

Friday, April 24, 2009

காதல், கானகம் - பகுதி 33

உனது எடையில்
கால் கிலோ,
முத்தமிட்டு குறைக்கட்டுமா?

55 மணி நேர முத்தமென்றால்
அது உலக சாதனையாகிவிடும்.
அதனால் வேண்டாம்.

உனை இப்பொழுதே
மணக்கட்டுமா?

தாலியும், மேளதாளமும்
தங்களிடம் இருக்கிறதா?

ம்... உனக்கு
மகிழ்ச்சி தரும்
விஷயம் ஒன்று சொல்லவா?

என்ன அது?

நமது திருமணத்திற்குப் பிறகு
உனது பெற்றோரும்
நம்முடந்தான் இருக்கப் போகிறார்கள்.

ஒரு நிமிடம்
உற்றுப்பார்த்த கண்கள்
உறைந்து போவதற்குள்
சிறிதளவு கண்ணீர்
கரை கடந்து ஓடியது.

ஆதவளே, இது என்ன
ஆனந்தக் கண்ணீரா?

நீ வீட்டுக்கு ஒரே மகள்.
உன்னையும் பிரிந்து
உன் பெற்றோர்கள்
அனாதையாவதில்
எனக்கு விருப்பமில்லை.
ஏற்கனவே இருவீட்டாரிடமும்
பேசிவிட்டேன் - உனக்கு
பரிசாக திருமணத்தன்று
சொல்லலாம் என்று இரகசியம்
சுமந்து வந்தேன்.

அனை மீறி வழியும் நீர்போல்
கண் கடந்து வரும்
கண்ணீரால்
காதலின் மடி நனைத்தாள்.

இதில் வியப்பென்ன
இருக்கிறது?
உனது குடும்பமும்
எனது குடும்பமும்
வேறல்லவே!

கண்ணீர் துடை - அருவித்
தண்ணீரெல்லாம்
உப்பாகி விடப் போகிறது.

ஏதோ கேட்கப் போகிறாள்
என்பதை வாய்க்கு
முன்னராக கண்கள்
முணு முணுத்தன.


(தொடரும்...)

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

0 comments:

இங்கே கண்தடம் பதித்தவர்கள்

நாட்காட்டி

தமிழ்வெளி

More than a Blog Aggregator

தமிழ் கணிமை

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

Thiratti.com

அதிகாலை

Instant dynamic Tamil News Portal