என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

Wednesday, April 22, 2009

காதல், கானகம் - பகுதி 31

அருகினில் செல்ல செல்ல
ஆர்ப்பரிக்கும் அருவி கண்டாள்
வழிந்து ஓடும்
வழித்தடம் எல்லாம்
வைரம் போல் மின்னும்
தண்ணீர் கண்டாள்.

பார்த்தாயா ஆதவளே,
பசுமையின் திடமான
சாட்சியாய் செழித்திருக்கும்
செல்வங்களைக் காண்.

அய்யா இங்க இருக்கும்
அத்தனையும் மூலிகைதாங்க
இந்தத் தண்ணி குடிச்சு
இளைப்பாறினா நடந்து வந்த
சலிப்பே போயிடுமுங்க
என்றான் இம்ரான்.

அப்படியே கைநிறைய
அள்ளி மனம் நிறைய
குடித்தார்கள்.

தண்ணீரில் இருக்கும்
தாய்மை உணர்ந்தார்கள்.

கொண்டு வந்த
கெட்டிச் சோறும்
நேத்து வச்ச
நல்ல புளிக்கொழப்பும்
இருக்குங்க, இங்கேயே
இருந்து சாப்பிட்டுட்டு
போலாமுங்க என மதியின்
பசியறிந்து சொன்னான் இம்ரான்.

ஆமாங்க அத்தான் இந்த
அரசமரத்தடியிலேயே அமர்ந்து
சாப்பிடுவோம் என்றாள் மதி.
சம்மதம் தெரிவித்தனர் மூவரும்.

கொண்டு வந்த சோறும்
குழம்பும் காலியானது....

யாரு வைத்த குழம்பு?
அருமையா இருக்கு.

அம்மா, இது நாந்தான்
வச்சேன். முந்திக் கொண்டான்
ஆரோக்கிய சாமி.

இந்தத் தண்ணியில வைக்குற
எந்தக் குழம்பும்
நல்லாத்தாம்மா இருக்கும்
நகையாடினான் இம்ரான்.

இவன் வைக்குற
இறைச்சி கொழம்ப
சாப்பிட்டீங்கன்னா
சாப்பாடே வெறுத்துடும்
உங்களுக்கு. இடித்து
உரைத்தான் சாமி.


(தொடரும்...)

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

0 comments:

இங்கே கண்தடம் பதித்தவர்கள்

நாட்காட்டி

தமிழ்வெளி

More than a Blog Aggregator

தமிழ் கணிமை

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

Thiratti.com

அதிகாலை

Instant dynamic Tamil News Portal