என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

Monday, April 27, 2009

காதல், கானகம் - பகுதி 34

எனது காய்ச்சலுக்கு
நீங்களும் பத்தியமிருக்கிறீர்கள்
எனது உணர்வுகளை
நான் சொல்லும் முன்பே
நிறைவேற்றி விடுகிறீர்கள்
உங்களை அடைந்தது
உறுதியாக நான் செய்த
பூர்வ ஜென்ம
புண்ணியம்தான்.

புகழ்ச்சிகளால்
புளங்காங்கிதம் அடையாது
புன்னகை மட்டும் செய்தான்.

எதற்கு இந்தச் சிரிப்பு?
எதையும் அறிவியலாய்
பார்க்கும் உங்களுக்கு
பூர்வ ஜென்மம் என்பது
புன்னகைதான்.

இல்லை.
இன்னும் அது பற்றிய
சிந்தனைகளில்
சிக்கியதில்லை நான்.

ஆனாலும்,
எனக்குத் தெரிந்ததை
உனக்குச் சொல்கிறேன் கேள்.

நிலம்,
நீர்,
நெருப்பு,
காற்று,
ஆகாயம்
இவை ஐந்தும் பூவுலகில்
இருக்கும் சதவிகிதம்
மனிதனுள்ளும் உண்டு.

ஆம்,
மனிதன் அண்டத்தின்
பிரதி பிம்பம்.
உடல்,
உலகின் சிறியதோர் அச்சு.
ஆன்மா,
அண்டத்தின் அச்சு.

உன்னை உணரு! - ஏனெனில்
அண்டம் போல்,
ஆன்மாவும் அணைவது இல்லை.
பூவுலகைப் போல்,
பூதவுடலுக்கும் அழிவுண்டு.
நீ உன்னை உணருவதும்
நீண்ட உலகங்களை உணருவதும் ஒன்றே.

அதனால் அண்டம் போல்
ஆன்மாவிற்கும்
அழிவில்லையோ என்னவோ?

உன்னை அறி என்னும் பொருளான
உள்கட எனும் வார்த்தைதான்
கடவுள் என மாறிற்று.

திடீரென்று
திரும்பிய புறமெல்லாம்
சருகுகளின் சலசலப்பு.
விலங்கோ இல்லை
மனிதர்களாகத்தான்
இருக்க வேண்டும்.


(தொடரும்...)

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

0 comments:

இங்கே கண்தடம் பதித்தவர்கள்

நாட்காட்டி

தமிழ்வெளி

More than a Blog Aggregator

தமிழ் கணிமை

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

Thiratti.com

அதிகாலை

Instant dynamic Tamil News Portal