என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

Tuesday, April 21, 2009

காதல், கானகம் - பகுதி 30

நெடுங்காடு - அவ்வப்பொழுது
நெஞ்சை உதற வைக்கும்
சருகளின் ஓசைகள்
சர்ப்பமோ, இல்லை
பேயோவென்ற மதியின்
பயத்தின் அளவை, அவள்
பிடித்திருக்கும் தன்
கைவிரல்களிலே
கச்சிதமாய் படியும்
அழுத்தம் கண்டு
அவன் உணரலானான்.

நாங்கள் மூவரும் உன்னோடு
நடக்கையில் எதற்காக
பயப்படுகிறாய்?
பயம் என்பது மாயை
கானல் நீர் போல
கடந்து சென்ற பிறகு
மறைந்து விடும்.

மலர்கள் பார்
மரங்கள் பார்
அரிய நாற்றம் நுகர்
அங்கே தூரத்தில்
தெரியும் அருவி பார்
தீராத ஓவியமாய்த்
தெரியும் மலைகள் பார்.

அருவியின் ஆற்றலில்
அரும்பி சட்டென்று
உடையும் நீர்க்குமிழி போல்
உள்ளே பிறந்த தைரியம்
மறுபடி ஒலி கேட்க
மதியிலிருந்து மறைந்தது.

எங்க உசுரு போகாம
உங்க உசுரு போகாதும்மா
இந்தக் காட்டுல
இரண்டு பேரும் நீண்ட காலமா
வாழுறவங்க நாங்க,
வழித்தடம் எல்லாம்
அத்துபுடி என்று
அறைகூவல் விட்டான்
ஆரோக்கிய சாமி.

சற்றே மனம்
சமாதானமடைந்தாலும்
இனம் புரியாத
இடையூருகளாகவே
தெரிந்தது மரங்களும்
தெளிவில்லாத பாதைகளும்.

மெல்ல விலகும்
மேகத்தினிடையே
அழகாய் ஒளிரும்
அம்புலியைப் போல
தூரம் குறையக் குறைய
தெளிவாகத் தெரியும்
அருவிய் தனது
அழகால் மதியின்
பயம் களைந்தது.

இவ்வளவு அழகான
இடமா இது?
எவருக்கும் தெரியாமல்
எழுதப் பட்டிருக்கும்
ஓவியம் கண்டு
ஒரு நிமிடம் திகைத்தாள்.


(தொடரும்...)

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

0 comments:

இங்கே கண்தடம் பதித்தவர்கள்

நாட்காட்டி

தமிழ்வெளி

More than a Blog Aggregator

தமிழ் கணிமை

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

Thiratti.com

அதிகாலை

Instant dynamic Tamil News Portal