என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

Friday, November 7, 2008

காதல், கானகம் - பகுதி 28

எங்கே
உங்களது நண்பர்கள்?
என்றாள்.

பத்து நிமிடம்
நடந்தால் அவர்கள்
குடில்.

காட்டிலாக்காவிற்கு
கடுமையாக உழைப்பவர்கள்.
இயற்கை மருத்துவத்தை
ஆராய்ச்சி செய்யும்
மருத்துவர் ஒருவரது
சீடர்களும் இப்பொழுது.

எங்கும் தோழர்கள் என்று
எனக்கு யாருமில்லை
நான் தாமரை போல்
நட்பென்னும் தண்ணீரில்
நனையாதே வளர்ந்தேன்.

தாமரை இலைகள்தான்
தண்ணீரில் ஒட்டுவதில்லை
வேர்கள் தண்ணீரிலே
விளையாடிக் கொண்டுதான் இருக்கும்.

தோழமைதான் சமுதாயம்
தெரிந்து கொள்வதற்கான கருவி.
விதவிதமான மனிதர்களிடம்
விளம்ப வேண்டும்
கேள்வி ஞானத்தின்
வேள்வி அதுவே.

சர்ச்சைகளும்
சண்டைகளும்
சமாதானங்களும்
சமமாகக் கொண்டது.

நட்புக்குள் இருக்கும்
முரண்பாட்டைக் களைய
முடிச்சுகளாய்ப் போடப்படும்
அன்பும், விட்டுக் கொடுத்தலும்
ஆரோக்கியமாக்கி விடும் நட்பை.
உளிகளின் அடிகள் சிலைக்கு
வலிகள் அல்ல!

பிரிகின்ற இல்லறங்களை விட
பிரிகின்ற நட்புகள் நிச்சயம்
குறைவாகத்தான் இருக்கும்.

எதிர்பார்ப்புகள் அதிகம் இல்லாத
எந்த உறவுகளும் பிரிவதில்லை

அய்யா,
வாங்க சாமி - உடன்
வந்திருப்பது வீட்டம்மாங்களா?
என்று அன்புடன்
எதிர்கொண்டது,
காதலின் நண்பர்கள்.

எத்தனை முறை
எடுத்துரைத்தாலும்
"அய்யா" என
அழைக்கும் பழக்கத்தை
அறுக்காதவர்கள்.

இவன் இம்ரான்
அவன் ஆரோக்கிய சாமி
எனது தோழர்கள்.


(தொடரும்...)

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

1 comments:

said...

//நட்புக்குள் இருக்கும்
முரண்பாட்டைக் களைய
முடிச்சுகளாய்ப் போடப்படும்
அன்பும், விட்டுக் கொடுத்தலும்
ஆரோக்கியமாக்கி விடும் நட்பை.//

அருமையான வரிகள்....
அன்புடன் அருணா

இங்கே கண்தடம் பதித்தவர்கள்

நாட்காட்டி

தமிழ்வெளி

More than a Blog Aggregator

தமிழ் கணிமை

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

Thiratti.com

அதிகாலை

Instant dynamic Tamil News Portal