என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

Tuesday, May 5, 2009

காதல், கானகம் - பகுதி 40

ஆனாலும் சாமி
அவர்களிடம் கேட்டேவிட்டான்.
எத்தனை நாள்
எங்களை இப்படி
வச்சிருப்பீங்க?
வயிறு பசிச்சா
சோத்துக்கு ஏதாவது
வழியிருக்கா என்றான்.

எல்லாம் வரும்
எங்களிடம் இருக்கும்
பலம் அறியாமல்
பேசுகிறாய் நீ.

காதல் மனதில்
கணக்குகள் ஓட
ஆரம்பித்தது.

கடத்தலுக்கும் இவர்கள்
கூறும் காரணங்களுக்கும்
ஏற்ற பாத்திரங்களாக
எடுபடவில்லை இவர்கள்.
இவர்கள் அம்புகள்
இதை எய்தவன்
எங்கிருக்கிறானோ என்று
எண்ணினான்.

குழந்தை போல்
தவழ்ந்து காதலின்
அருகே அமர்ந்தாள்
அழுதாள்.

அவள் கேட்கப் போகும்
அணைத்து கேள்விகளுக்கும்
விடையில்லாதவனாய் இருந்தான்.

இதுதான் வாழ்க்கையா?
இப்படி கற்றுக்கொள்ளத்தான்
காடு அழைத்தீர்களா?
இடுகாடு இதுவென்று
அறியாமலேயே அளவிலா
ஆனந்தம் கொண்டேன்.

திருமணம் நடக்குமா?
திரும்பிப் போகத்தான்
வழி உண்டா?
வாய் நிறைய காடு
காடு என்றதற்கு பலனாக
கிடைத்ததைப் பார்த்தீர்களா?

அழாதே!
அவன் சொற்கள்
அவளைத் தேற்றவில்லை.


(தொடரும்...)

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

0 comments:

இங்கே கண்தடம் பதித்தவர்கள்

நாட்காட்டி

தமிழ்வெளி

More than a Blog Aggregator

தமிழ் கணிமை

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

Thiratti.com

அதிகாலை

Instant dynamic Tamil News Portal