என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

Monday, May 4, 2009

காதல், கானகம் - பகுதி 39

இன்னும் ஒரே நாளில்
இதற்கான உண்மை
உலகுக்குப் புரியும்
உனக்கும் புரியும்.

என்னைக் கடத்தி வைத்திருக்கிறீர்கள்
என்ற உரிமையில் கேட்கிறேன்,
என்னிடம் சொல்லுங்களேன்.

ஏம்பா இப்படி
என் உயிர வாங்குற?
சொல்லுறேன் கேளு.

தமிழ்நாட்டுல
தமிழ் கட்டாயப் பாடமாகணும்,
மாநகராட்சி பள்ளி முதல்
மைனருங்க படிக்குற
பள்ளி வரை இது சட்டமாகணும்.

என்ன வினோதம்? - இதற்கு
எதற்கு இத்தனை பெரிய முயற்சி?
என்னென்ன போராட்டங்களை
எடுத்தீர்கள் இதற்காய்?
அதில் எத்தனை தோல்விகள்?

உனக்கு சொல்ல வேண்டியதாய்
கணக்கு ஒன்றும் இல்லை.
மெத்த படித்த பணமுடையவர்கள்
மொத்தமாய் தமிழை
மறந்துவிட்டீர்கள்.
தத்தம் மொழிகளை விடுத்து
தங்கள் பிள்ளைகளைக் கூட
வெளிநாட்டிலேயே படிக்க
வைக்கிறீர்கள்.
வாய் பேசுவதற்கு
அருகதையில்லாதவர் நீங்கள்.

உன் கோபம்
உண்மை - ஆனால்
எங்களை கடத்துவதால்
எந்த பயனும் நீ
அடையப்போவதில்லை.
அரசாங்கம் சடுதியில்
இணைந்து கொடுக்கும் விஷயம்
இதுவல்ல.

பலநூறு விதிமுறைகள் மீதும்
பாரதத்தின் இறையான்மை
பற்றியும் கேள்விகள் வரும்.

இல்லை, இதற்கு
இணங்கி தமிழகமெங்கும்
குரல்கள் ஒலிக்கும்
குழப்பத்தில் அரசு
கோரிக்கையை ஏற்கும்.

பஞ்சாயத்தை வேடிக்கை
பார்க்கும் குழந்தை போல
சாமியும், இம்ரானும்
சத்தமின்றி அமர்ந்திருந்தனர்.

நடப்பதறிந்த நால்வரும்
நம்பிக்கை கொண்டிருந்தார்கள்
அமைதியாக ஆளுக்கொரு திசையில்
அமர்ந்திருந்தார்கள்.


(தொடரும்...)

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

0 comments:

இங்கே கண்தடம் பதித்தவர்கள்

நாட்காட்டி

தமிழ்வெளி

More than a Blog Aggregator

தமிழ் கணிமை

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

Thiratti.com

அதிகாலை

Instant dynamic Tamil News Portal