என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

Thursday, May 7, 2009

காதல், கானகம் - பகுதி 42

இந்தக் கடத்தல்
இந்திய அரசாங்கத்திற்கு
வந்திருக்கும் நோய்
வழியொன்று தேடுவதற்கான முயற்சி.
நோய் வந்தால் நிச்சயம் நம்
மெய் உறுப்புகள் பாதிப்படையும்
இங்கே நாம் பாதிக்கப்பட்டிருக்கிறோம்
இன்னொருமுறை இது நடவாத நிலைவேண்டும்.
இவர்கள் கையிலெடுத்த
இந்த முறை தவறு - ஆனால்
கருத்து தவறானதல்ல
காலம் பதில் சொல்லும்.

ஆடுகின்ற பம்பரங்கள் இவர்கள்
ஆட்டுவிப்பார் எங்கோ இருந்து
சாட்டையை சுழற்றுகிறார்
சூழ்ச்சியில் சிக்கி இந்த
மானிடரும் சுழல்கின்றனர்
மனிதம் உணர்த்துவேன் இவர்களுக்கு.

இருளத் தொடங்கியது
இப்பொழுது வரை இருந்த
மதியின் தைரியச் சூரியன்
மறையத் தொடங்கியது.

காடு பயம்
காரிருளும் பயம்
எரியும் கொள்ளியில்
எண்ணெய் ஊற்றியது
போலாயிற்று பயந்த
பேதையவள் மதிக்கு.

பணிகளை முடித்துவிட்டு
பதட்டத்தோடு வீடுவந்தார்
நாகய்யன்.

என்னாச்சு பிள்ளைங்க
எங்கே?
இன்னும் வரவில்லையா?
இருட்டி விட்டது.

வயிற்றில் நெருப்பள்ளி
வைத்திருப்பவள் போல்
உருகினாள்
உளறினாள் மலர்.

மதியத்திலிருந்து
மரித்து விட்டது தொடர்பு எல்லாம்.
பூங்கா சென்றேன், காணவில்லை
பொறுக்காமல்தான் தகவல் தந்தேன்
புழுவாய் துடித்தாள் மலர்.

பொறு, பொறு
பூங்காவை பார்த்து விட்டு
வேறு எங்காவது
விரைந்திருக்கலாம்.
அலைபேசி தொடர்பில்லையென்றால்
அவர்கள் எங்கேயிருப்பார்கள்?

மதி மனையும் செல்லவில்லை
மற்ற நண்பர்களிடமும் செல்லவில்லை

செய்திகளின் ஓசையில்
சாவு மணி அடித்தது.


(தொடரும்...)

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

0 comments:

இங்கே கண்தடம் பதித்தவர்கள்

நாட்காட்டி

தமிழ்வெளி

More than a Blog Aggregator

தமிழ் கணிமை

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

Thiratti.com

அதிகாலை

Instant dynamic Tamil News Portal