அரசாங்க அதிகாரியும்
அவரது வருங்கால மனைவியும்
அவருடன் சென்ற இரண்டு பேரும்
அபாயத்தில் இருக்கின்றனர்.
தமிழை கட்டாயப் பாடமாக்க வேண்டும்
தமிழ்க்கல்வி முறை அனைத்து
துறைகளிலும் வருதல் வேண்டுமென்று
தங்கள் கோரிக்கையை தெரிவித்துள்ளனர்.
அவர்கள் இருக்குமிடம் தெரியவில்லை
அடுத்த கட்ட நடவடிக்கை
என்பதும் இன்னும் முடிவாகவில்லை.
படபடத்த நெஞ்சம்
பயத்தின் உச்சானிக் கொம்பைப்
பிடித்துக் கொண்டு ஆடியது.
பேச்சைவிற்ற பாடகன் போல்
புகழை விற்ற அரசன் போல்
கற்பனையை விற்ற கவிஞன் போல்
கண்களை விற்ற ஓவியன் போல்
வாய்ப்பின்றி துடித்தார் நாகய்யன்.
இடிவிழுவதறியாது காற்றில்
இலையோடு இசைபாடும்
பனைமரமாகியது உள்ளம்.
ஒரு மணி நேரத்தில்
ஒன்றாய் கூடியது சொந்தங்கள்
செய்வதென்பதறியாது
செயலற்றனர் மதியின் பெற்றோர்.
காட்டிலாக்கா அதிகாரிகள்
வீட்டிற்கு வந்தனர்.
ஒன்றும் நேராது
என்று சமாதானம் சொன்னார்கள்
அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த
அரசாங்கம் தயாராக இருக்கிறது
உயிருடனோ இல்லை பிணமாகவோ
அவர்களை பிடிப்போம் - நம்மவர்களை
பத்திரமாக மீட்போம் என்று
பறைசாற்றினர்.
அறுவடை நாளின் மழைபோல்
ஆனது திருமண ஏற்பாடு.
நாட்கள் வேகமாய்
நகர்ந்தது.
இமைக்கும் நேரத்தில்
இரண்டு நாள் ஓடிப்போனது.
தேர்தல் நேரத்தில்
துரிதமாய் ஓட்டு சேர்க்க
அரசியல்வாதிகள் முடிந்தவரை
ஆங்கேங்கே மேடையிட்டு
கோரிக்கைக்கு ஆதரவுக்
கரம் நீட்டினர்.
அடுத்தகட்ட நடவடிக்கை குறித்த
ஆலோசனைகள் நடத்தப் பட்டன
காவலர்கள் தேடுதல் பணியில்
கவனமானார்கள்.
(தொடரும்...)
முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து
என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்
என்னைப் பற்றி...
படைப்புகளை மின்னஞ்சலில் பெற...
Friday, May 8, 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment