சூழ்நிலைகளாலும்
சந்தர்ப்பவசத்தாலும்
நான் குற்றவாளியாகிவிட்டேன்
நமது நிலைமைக்கு
காடு பொறுப்பல்ல
கடிந்து சாபம் விட்டிடாதே காட்டிற்கு.
தோல்விகளின் போது அது
தரும் பாடங்களை
அறிந்து கொள்ள வேண்டும்
அவனியில் மிகப்பெரிய
ஆசான் தோல்வி ஒன்றுதான்.
இறப்பது உறுதியெனினும்
இறுதி வரை போராட வேண்டும்
இந்தத்துயர் மீளாத்துயரென
இவ்வாறு பேசினாயோ?
கடைசி சொட்டு
குருதி எனக்கிருக்கும் வரை
உனக்கெந்த பாதிப்பும் வராது
உண்மையிதை நம்பு.
உயிர் கொடுத்து என்
உயிர் காப்பாற்றி
என்ன பயன்?
எதற்கு எனக்கந்த வாழ்வு?
வரவேண்டாம் என்று
வாதாடினேன்
நீங்கள் கேட்கவில்லை.
காக்கை உட்கார பனம்பழம் விழுந்த
கதையாயிற்று உனது.
சிறை சென்று மனம்திருந்தி
சிறைக்காவியங்கள் எழுதிய
எத்தனையோ பேர் இருக்கிறார்கள்
துன்பத்திலும் தளராமல்
துவண்டு போகாதிருக்க வேண்டும்
காலத்திற்கு எதையும்
குணமாக்கும் சக்தி உண்டு.
அரிச்சந்திரன் பட்ட துன்பங்களை
அறிந்திருக்கிறாயா?
இராமன் பட்ட துயரங்களை
அறிந்திருக்கிறாயா?
இயேசுபிரான் பட்ட துன்பங்களை
அறிந்திருக்கிறாயா?
கொலம்பஸ் பட்ட துயரங்களை
அறிந்திருக்கிறாயா?
தோல்வியிலும் பாடம் கற்றுத்
தேறுபவரே வெற்றி பெறுகிறார்.
உயிர் பயம் களை
உனது என்று சொல்ல
எதுவுமே இங்கு உனக்கு
என்றில்லை என்பதை உணர்.
எதைக் கொண்டு வந்தாய் நீ
எடுத்துச் செல்வதற்கு என்ற
பகவத் கீதையின்
பொன்மொழி மறந்தாயா?
பேதையே, எத்தனையோ
பாலங்கள் இடிந்துவிழுவதால்
பயணிக்காமல் ஒதுங்கவேண்டுமென்று
பயப்படுகிறோமா?
சாலைவிபத்துக்களுக்கு பயந்து
சாலையை புறக்கனிக்கிறோமா?
காய்ச்சல் வருமென்று பயந்து
கட்டுப்பாட்டோடு எத்தனை நாளிருப்பாய்?
நோயென்பது மனிதனுக்கு
நேரவேண்டும், இல்லையெனில்
உடலுறுப்புகளின் பெருமைகளை
உணரவே மாட்டான்.
(தொடரும்...)
முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து
என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்
என்னைப் பற்றி...
படைப்புகளை மின்னஞ்சலில் பெற...
Wednesday, May 6, 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment