என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

Wednesday, May 13, 2009

காதல், கானகம் - பகுதி 46

தப்பிக்க நினைத்தவர்களை
தடுத்தான் காதல்.

நீங்கள் யாருக்காகவோ
நிலை தடுமாறி இந்தக்
காரியம் செய்தீர் - இனி உங்களை
காத்திட எவரும் வரப் போவதில்லை.

தத்தம் பெயர்களுக்காகவும்
தன் சுயலாபத்துக்காகவும்
யாரோ செய்கின்ற சூழ்ச்சியில்
இன்று நீங்கள் மாட்டிக் கொண்டீர்கள்.

உங்களால் பயனடைந்தவன் இன்று
உங்கள் உயிர் காக்கப் போவதில்லை.

துப்பாக்கியல் எந்த நாடும்
தனது நிம்மதியான சுதந்திரம் பெறவில்லை
நீங்கள் வாழ என்னால்
வழி செய்ய முடியும்.
வந்துவிடுங்கள் என்னோடு.

நாளை உங்களை ஓடச்சொன்ன
நயவஞ்சகன், இன்றே உங்களை
கொல்லத் துணிய காரணம்
கூறட்டுமா?

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்
ஒன்று அவர்களது பெயர் பெரிதாயிற்று
இன்னொன்று உங்களைக் கொல்வதால்
அவர்களின் பெயரும் வெளியே தெரியாது.

உங்களைக் கடத்தி தீமைகள் செய்தேன்
எங்களைக் காத்திட வழியும் சொல்கிறீர்.
ஆனால் இதை கேட்கும்
அளவிற்கு எங்கள் வாழ்க்கை
இல்லை என்றான் கூட்டத் தலைவன்.

துப்பாக்கி எடுத்தார்கள்
துணை இதுவொன்றுதான்
என்றெண்ணி ஓட்டம்
எடுத்தனர்.

காவல்துறையினர் காதலை
கண்டுபிடித்து விட்டார்கள்.
காதல் அவசர கட்டளைகளை
சொன்னான்.

அவர்களை உயிருடன் பிடிக்க வேண்டும்
அவர்கள் தொடர்பில் முக்கியமானோர்
இருக்கிறார்கள் என்றான்.

தூரத்தில் வெடிக்கும்
துப்பாக்கிகளின் ஓசை.
சிறிது நேரத்தில்
சத்தம் அடங்கியது.

ஆம்,
அவர்கள்தான் இறந்தது.
இன்னமும் அவர்களுடன்
இறந்தது உண்மையும்தான்.

உயிர் பயமும், பேய் பயமும்
உதரினாள் மதி.
இனிய இல்லத்தை
இருவரின் பெற்றோர்களும்
இல்லறத்தை மதியும்
சமுதாயத்தையும், காட்டையும்
காதலும் அன்புடன் நடத்தினார்கள்.


(முற்றும்)

இத்தனை நாளும் பொறுமையாக வாசித்தவர்களுக்கும், சிலருக்கு நேரம் கிடைத்து பின்னூட்டமிட்டவர்களுக்கும், என் மனமார்ந்த மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
முதல் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முதல்

1 comments:

said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

இங்கே கண்தடம் பதித்தவர்கள்

நாட்காட்டி

தமிழ்வெளி

More than a Blog Aggregator

தமிழ் கணிமை

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

Thiratti.com

அதிகாலை

Instant dynamic Tamil News Portal