பிணைக் கைதிகளாக எடுத்த
புகைப்படம் வெளியானது
அதில் தடயம் ஏதும்
அடங்கியிருக்கிறாதெவென்று
துப்பு துலங்கலாயிற்று
துப்பு ஒன்றுதான் பாக்கி
சிக்கிவிட்டது என்றால்
சின்னாபின்னமாகிவிடுவர்
என்றது காவல்துறை.
மாநிலம் முழுதும் பல கோடி
மனங்களின் அலசல்கள்
அதற்கான விவாதங்கள்
அரங்கேறின!
முதல் கட்ட மகிழ்ச்சி
முடுக்கிவிடப்பட்ட
காவல்துறையினருக்கு.
கட்சிப் பிரமுகர் ஒருவர்
கொடுத்த துப்பின் படி
காட்டின் ஒரு பகுதியில்
காதலின் மகிழ்வுந்தை
கண்டுவிட்டனர்.
அவர்களை காட்டிற்குள் தேடி
அலசும் பணி தீவிரமானது.
மூன்றாம் நாள் விடிந்தது.
காலைச் சூரியனை
கடமை தவறாது
பார்த்தது பூமி.
இருளை விலக்கும்
பேரொளி வந்தது
தங்கள் துன்பம் விலக்க
தேவையான ஒரு வழி
கிடைக்குமா என்ற
கனத்துடன் கண்விழித்தாள் மதி.
கொஞ்ச நேரத்தில்
காதலும் எழுந்தான்.
காதலியை அருகினில்
காணவில்லை, பதறினான்.
திருவிழாக் கூட்டத்தில்
தொலைந்துபோன குழந்தையை
கண்ணெதிரில் கண்டது போன்ற
களிப்பு, மரமொன்றின் ஓரத்தில்
மதி பத்திரமாய் இருந்தாள்.
காது முடுக்கினாள்
கண்மறைவில் அவர்கள்
பேசுவதை ஒட்டு கேட்டாள்.
(தொடரும்...)
முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து
என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்
என்னைப் பற்றி...
படைப்புகளை மின்னஞ்சலில் பெற...
Monday, May 11, 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment