என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

Wednesday, May 28, 2008

தலைகீழாய்த் தெரியுது வானம்

வெளிச்சமில்லாத குகையில்
வெறித்தனமாய் ஓடிக்
கொண்டே இருக்கிறேன்.
விளக்குகளாய் வந்த மனதின்
விளக்கங்கள் யாவையும்
உதறி விட்டு மேலும் மேலும்
ஓடுகிறேன்.... ஓடுகிறேன்.

என்னுடன் ஓடத்
தொடங்கியவர்கள்
ஆங்காங்கே சுருண்டு விழ
அவர்களைப் பார்த்து
எள்ளி நகையாடிக் கொண்டே
எனது ஓட்டத்தைத் தொடருகிறேன்.

கால்கள் இடறுகிறது
கைகள் வட்டிக் கடக்காரனிடம்
சம்பளத் தேதியன்று
சிக்கிக் கொண்டது போல உதறுகிறது.
கனவுலகத்திலும் நிச உலகத்திலும்
கணத்திற்கொரு முறை
மாறி மாறி பயணிக்கிறது
மனதும், கொஞ்சம் அறிவும்.

வெளிச்சத்தில் விழுந்த
விட்டில் பூச்சியாய்
மீதமிருந்த தைரியத்தில்
மூளையை அடகுவைத்துவிட்டேன்.
கீழே விழுந்தவர்களையெல்லாம்
கொண்டு சேர்க்க
வந்த பாதை நோக்கிப்
பயணிக்கிறேன்.

எங்கேயோ ஒட்டிக்கொண்டு
எச்சமாயிருந்த அறிவிருந்தும்
பயணம் பாதைகளை விட்டு
பெயர்ந்தே செல்கிறது.
என்னைப் பார்த்து
எல்லோரும் பயப்படுவது
அசட்டு தைரியத்தை எனக்கு
அதிகப்படுத்துகிறது.

பெரிய ஒலி,
உறைந்தது நினைவு.
கண்விழித்துப் பார்க்கிறேன்
காக்கிச் சட்டை சரமாறியாக
என்னைக் கேள்வி கேட்கிறது
எதையோ பறிகொடுத்தாற்போல
தேம்பித் தேம்பி அழுதுகொண்டே
தவிக்கிறது சில மானுடங்கள்.

அவர்கள் கேட்ட ஒரே கேள்வி.
இல்லை இல்லை
அவர்கள் சொன்ன ஒரே தகவல்.
"குடிச்சுட்டு வாகனம் ஓட்டி என்
குடியைக் கெடுத்துட்டியடா".

திரும்பிப் பார்க்கிறேன்...
தள்ளுவண்டியில் ஒரு பெண்ணின் சடலம்.

0 comments:

இங்கே கண்தடம் பதித்தவர்கள்

நாட்காட்டி

தமிழ்வெளி

More than a Blog Aggregator

தமிழ் கணிமை

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

Thiratti.com

அதிகாலை

Instant dynamic Tamil News Portal