என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

Thursday, May 22, 2008

முதியோர் இல்லம்

சருகுகளாகமலேயே
உதிர்த்துவிடப்பட்ட பழுத்த இலைகள்
உதிர்ந்தாலும் அந்த மரத்திற்கே
உரமாகும் உயரிய உள்ளம்
அவர்களுக்கு உண்டு.

நம் உலகம் முழுவதும்
நடமாடிக் கொண்டிருந்த
சில ஜீவன்கள்
சிறிது காலமாக
நடைப் பிணங்களாகவே
நடை போடுகிறார்கள்.

கைரேகைகள் தேயத் தேய
கொண்டு வந்ததில்
வளர்ந்த பாண்டங்கள்
இறுதிப் பிண்டம்
கரைக்கவாவது வருவார்களா?

வழியில் காணும் சொந்தங்களிடம்
விழியில் நீரை அடக்கி
என் பிள்ளை நலமா என
விசாரிக்கும் வயது முதிர்ந்த பாசங்கள்.
கோடி கோடியாய்க்
கொட்டிக் கொடுத்தாலும்
கோவில் கோவிலாய்
ஏறி இறங்கினாலும்
எங்கு கிடைக்கும்
இப்படி ஒரு பேசும் தெய்வம்?

தோளில் தூக்கி
தெருவெல்லாம் சுமந்தவந்த
கால்கள் இன்று தடுமாறுகையில்
உயிரில்லா குச்சிகூட
உதவுகிறது, இந்த
மனசாட்சி இல்லாத
மிருகங்களுக்கு மனமில்லை.

அன்பு இல்லாததால்
அவதரித்து இருப்பினும்
அவர்கள் வசிப்பது
அன்பு இல்லம்தான்.

இன்றைய பிள்ளை
நாளைய பெற்றோர்
என மறந்த பேதைகள்
இவர்கள் பெற்ற மாந்தர்கள்.

0 comments:

இங்கே கண்தடம் பதித்தவர்கள்

நாட்காட்டி

தமிழ்வெளி

More than a Blog Aggregator

தமிழ் கணிமை

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

Thiratti.com

அதிகாலை

Instant dynamic Tamil News Portal