என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

Thursday, May 29, 2008

என்று தணியும் இந்தத் தா(க்)கம்

இது,
புலனடக்கத் தவறியவர்களுக்காக
புராணத்திலிருந்து வரும் பாரம்பரிய இடம்....

இது எனது
இறுதி மடலாகவும்
இருக்கலாம்.

இது வரை நான்
எழுதிய கடிதங்களை
எந்தவித பாதிப்பும் இன்றி
பாதுகாத்து வரும் எனது
மேசைக்கு நன்றி.

வேறு யாருக்கு நான்
நன்றி சொல்ல வேண்டும்....
ம்....
என்னைப் பெற்றவள் நல்லவள்
எனில், அவளுக்குமொரு நன்றி.

ஊர் பெயர் தெரியாத
உலகத்தில் என்னையும்
உருவாக்கியது இந்த
இடம்தான்.
இரண்டு வயதாம்
நான் இங்கே கடத்தி
வரப்பட்டு விட்டபொழுது.

இருந்த இறைவன் நம்பிக்கையும்
இற்றுப் போனது,
ஏதோ ஒரு நாளில்
எவருக்கோ மெத்தைப்
பந்தியில் விரித்த
முந்தியில்.

நான் பிறந்த பொழுது
எனது தாய் பெற்ற
மகிழ்ச்சியை விட
மயங்கிய மாலையில்
நான் வயதுக்கு வந்த
நாளை இங்கே
கூடி இருந்தவர்கள்
கொண்டாடியது உண்மை.

அன்றாடங்காய்ச்சி முதல்
அரசியல்வாதி வரை
அனைவரையும் சந்தித்திருக்கிறது இன்று
அழகிழந்து கிடக்கும் எனது உடல்.
மரணம் ஒன்றும் எனக்குப்
புதிதல்ல - இங்கே
உயிர்த்தெழுந்த பலனை
ஒவ்வொருவரும் அனுபவிக்கும்
தருணமெல்லாம் நான் இறந்திருக்கிறேன்.

இந்த இடத்திற்கும்
இந்தியாவில் அரசு அங்கீகாரம்
அளித்திருப்பது அவமானம்தான்.
கையூட்டு இருக்கும்வரை
இந்தச் சட்டத்தில்
இறக்கப் போகும் என்போல்
பெண்டிர் எத்தனையோ?!

அய்யகோ! மறந்துவிட்டேனே.
அன்றொரு நாள் எனக்குக்
காட்சிக் கொடுத்த இறைவனை - ஆம்
கட்டில் வரை வந்து
உனக்கு சம்மதமா எனக்கேட்டு
நான் இல்லையென்றதும்
வந்த வழியே திரும்பிப்போனவருக்கும்
எனது நன்றி.

0 comments:

இங்கே கண்தடம் பதித்தவர்கள்

நாட்காட்டி

தமிழ்வெளி

More than a Blog Aggregator

தமிழ் கணிமை

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

Thiratti.com

அதிகாலை

Instant dynamic Tamil News Portal