என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

Thursday, November 6, 2008

உயிர்த்தெழு ஒவ்வொருமுறையும் - செதுக்கப்பட்ட மறுபிரசுரம்

காதலின் தோல்விதனில்
தன்னையிழந்து தவிக்கும் தருணம்
உன் பூக்களும் இலைகளும்
உதிர்க்கப்பட்டிருக்கலாம்
குளிரின் குரூரத்தால்.
காற்று பிரிந்த கூடு
தன்மையாய் போவதியல்புதான்.

இருக்கட்டுமே நீ
இருப்பது அண்டார்டிகா
அல்லவே அசோகவனம்தான்,
அற்பமாய் உதிர்ந்த இலைகள்
எடுத்து உன் வேருக்கு
எருவாய் இட்டுக் கொள்
உயிர்த்தெழுவாய் பிறிதொருமுறை.

அன்பாய், நட்பாய்,
ஆதரவாய், தாங்குதலாய்,
ஏன்? மீண்டும் காதலாகக்கூட
திரிந்து பரவட்டுமுன்
உடைந்து போன காதல் மனம்,
உன் இலைகளும் பூக்களும்
மறுபடி பிறந்தெழுந்து
மணம் வீசட்டும் பாரெங்கும்.

0 comments:

இங்கே கண்தடம் பதித்தவர்கள்

நாட்காட்டி

தமிழ்வெளி

More than a Blog Aggregator

தமிழ் கணிமை

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

Thiratti.com

அதிகாலை

Instant dynamic Tamil News Portal