என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

Sunday, November 9, 2008

மேகங்களே! ஓ மேகங்களே!

மேகங்களே! ஓ மேகங்களே!
மெல்ல மெல்ல மிதந்து
செல்லும் வானத்து நுரைகளே
செல்லமாக தவழ்ந்து போகும்
நிலையாமையின் தத்துவங்களே!

நித்திரையின்றிச் செல்லும்
நீர் நிரப்பிகளே!
சொல்வீர்களா எங்கிருந்து
வருகிறீர்கள் என்று?

நீ பிறந்த தேசமெதுவோ?
நினக்கு இனம், மொழி
தடையல்லவோ?

தண்ணீர் தரமறுக்கும்
மனிதன்கண்ணில் மண்தூவி
வந்தனையோ சமத்துவத்தை
வாழ வைக்க?
வாழி நீ!

காடு மலைகளையும்
எல்லைக் கோடுகளையும்
தாண்டி வரும் ஆவிகளே!
மன்னிப்பாய்
உன் பிறந்த இடம் தெரியாது
நீ விழுந்த இடத்தில் நின்று கொண்டு
எனது எனது என
மார்தட்டும் பாவிகளை!

உலகத்துப் பொருட்கள் யாவும்
உன்னுள் காட்டுகின்றாய்
உடனே அவைகளை மாற்றுகின்றாய்
உயிர்களைப் பேணுகின்றாய்
கோபத்தால் அழிக்கின்றாய்
கடவுளரோ நீங்கள்?

தவழ்ந்த தடமெதுவும்
பதியாது போகிறீர்களே,
முதலிரவு அறைக்குள்
அன்னநடை போடும்
நங்கையரோ நீங்கள்?
அல்லது பொருளைத்
திருடும் கள்வர்களோ நீங்கள்?

தூது சொல்லி அனுப்பியதாரோ
நீங்கள் சுமக்கும் சேதியெதுவோ?

மனமிருந்தால் உயர்வாயென்றும்
தலைகனத்தால் வீழ்வாயென்றும்
தத்துவம் சொல்லும்
மாமேதைகள் நீங்கள்!

மனம் வெளுத்தால் வான்புகழுண்டென்றும்
தீநெறி கருத்தால் தாழ்வாயென்றும்
உண்மைகள் சொல்லும்
உயர்ந்தோர்கள் நீங்கள்!

எடுப்போம் எங்கிருந்தும்
கொடுப்போம் சமமாயென
கம்யூனிஸம் பேசும்
காரல்மார்க்ஸுகள் நீங்கள்!

மேகவுடல் நீத்து
வன்கடல் புகுந்து
மீண்டும் மேகமாவதால்
ஆன்மாவின் தத்துவத்தை
அறிவிக்கிறீர்கள் நீங்கள்!

வானம் நிரப்பும் மேகங்களே
வாருங்கள் கூக்குரலிட்டு
சேருங்கள் சேதி சொல்லுங்கள்
நிரப்புங்கள் மனித மனப்பள்ளங்களை!

2 comments:

said...

என்ன ஒளியவன் எல்லாத்தையும் இப்படி அள்ளிக் கொட்டுறீங்க

said...

மிக்க நன்றிங்க. மேகத்திற்கு மேல் இரும்புப் பறவையில் பறந்து வந்த பொழுது எழுதியது.

இங்கே கண்தடம் பதித்தவர்கள்

நாட்காட்டி

தமிழ்வெளி

More than a Blog Aggregator

தமிழ் கணிமை

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

Thiratti.com

அதிகாலை

Instant dynamic Tamil News Portal