என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

Tuesday, November 4, 2008

காதல், கானகம் - பகுதி 25

இன்னமும் நிறைய
ஆராய்ச்சிகள் செய்யப் படவேண்டிய
அவசிய தளங்களில்
அலைகளும் ஒன்று.
இரும்புத் துண்டு
இந்த மின்காந்த அலைகளை
கவரவல்லது என்பதற்காகவும்
காலிலோ, கையிலோ வளையமாக இட்டிருக்கலாம்.

கவரவல்லது எனின்
அதை நாம் அணியக் கூடாது
அல்லவா?

உண்மை உள்ளேயிருப்பதை
உணர்.
இடிதாங்கியின் வேலைபோல்
இரும்பு வளையமும் வேலை செய்யலாம்.
காரணங்கள் இல்லாமல்
காலத்தோடு வரும்
பழக்கவழக்கங்கள் இருப்பதில்லை.
பதில் தேடுவதில்தான்
திறமை இருக்கின்றது.
தீமையுள்ள பழக்கங்களும்
இடையிடையே
இருக்கலாம்
அதையும் தெளிந்து
அகற்ற வேண்டும்.

ஆக பேய் இருக்கின்றதல்லவா?

நோயும்தான் இருக்கிறது
அதற்காக பயந்து
அகன்றிருந்தால் மருத்துவம் வந்திருக்குமா?
பேயும் நோய்தான்
பின்னொரு நாள்
அறிவியல் கூறப்போகும்
அறிய உண்மையும் இதுவே.

இப்பொழுது சொல்
இனி பேயைக் கண்டு அஞ்சுவாயா?

நான் நோயைக்
கண்டும் அஞ்சுபவள்
என இனமொழிதல் விடை கூறினாள்.

உங்களுக்கு அச்சமென்பதே இல்லையா?
நீங்கள் எதைக் கண்டாவது
அஞ்சுவீரா அத்தான்?

கேள்விக்கான விடையறிந்தும்
கேட்கின்றாய்.
கூறுகிறேன் கேள்.
உன்னை சந்திக்கும் வரை
உச்சந்தலை முதல்
உள்ளங்கால் வரை அச்சமில்லை.
உன்னைக் கண்ட பிறகுதான்
உண்மையில் அச்சம் கொள்பவனானேன்.

உன் கோப விழிகளால்
உற்றுப்பார்க்கும் போது
சுற்றம் எரியுமோவென அஞ்சுவேன்.

மலர் எடுத்து
தலையில் சூடும்போது
உனக்கு வலிக்குமோவென அஞ்சுவேன்.

நீ சிரிக்கும் பொழுது
வைரங்களாய் மின்னும் பற்கள் கண்டு
கப்பல் ஏதும் கரை ஒதுங்குமோவென அஞ்சுவேன்.

நீ நகம் வெட்டும்போது,
வெட்டுண்ட நகம் உன்னைப் பிரிந்த
கோபத்தில் சாபமிடுமோவென அஞ்சுவேன்.

நீ நடக்கும்போது
நிலத்தில் பட்டு உன்
கால் நோகுமோவென அஞ்சுவேன்.

நீ கடலில் கால்வைத்ததும்
கடல் நீர் குடிநீராகி அதனால் ஏற்படும் நீரோட்ட
மாற்றத்தால் நிலம் மூழ்குமோவென அஞ்சுவேன்


(தொடரும்...)

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

1 comments:

said...

/உங்களுக்கு அச்சமென்பதே இல்லையா?
நீங்கள் எதைக் கண்டாவது
அஞ்சுவீரா அத்தான்?

கேள்விக்கான விடையறிந்தும்
கேட்கின்றாய்.
கூறுகிறேன் கேள்.
உன்னை சந்திக்கும் வரை
உச்சந்தலை முதல்
உள்ளங்கால் வரை அச்சமில்லை.
உன்னைக் கண்ட பிறகுதான்
உண்மையில் அச்சம் கொள்பவனானேன்.

உன் கோப விழிகளால்
உற்றுப்பார்க்கும் போது
சுற்றம் எரியுமோவென அஞ்சுவேன்.

மலர் எடுத்து
தலையில் சூடும்போது
உனக்கு வலிக்குமோவென அஞ்சுவேன்.

நீ சிரிக்கும் பொழுது
வைரங்களாய் மின்னும் பற்கள் கண்டு
கப்பல் ஏதும் கரை ஒதுங்குமோவென அஞ்சுவேன்.

நீ நகம் வெட்டும்போது,
வெட்டுண்ட நகம் உன்னைப் பிரிந்த
கோபத்தில் சாபமிடுமோவென அஞ்சுவேன்.

நீ நடக்கும்போது
நிலத்தில் பட்டு உன்
கால் நோகுமோவென அஞ்சுவேன்.

நீ கடலில் கால்வைத்ததும்
கடல் நீர் குடிநீராகி அதனால் ஏற்படும் நீரோட்ட
மாற்றத்தால் நிலம் மூழ்குமோவென அஞ்சுவேன்

/

அருமை

இங்கே கண்தடம் பதித்தவர்கள்

நாட்காட்டி

தமிழ்வெளி

More than a Blog Aggregator

தமிழ் கணிமை

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

Thiratti.com

அதிகாலை

Instant dynamic Tamil News Portal