என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

Wednesday, November 5, 2008

காதல், கானகம் - பகுதி 26

பசி தீர்ந்த பின்னும்
பந்தியில் சோறு வைக்கும் பொழுது
மனதே நிறைந்து விட்டது
போதும் போதும் எனச் சொல்வதுபோல்
போதும் போதுமென்றாள்.
பித்தம் ஏறிய தலை போல்
சுற்றுகிறது.
பேசிப் பேசியே
சக்தி குறைந்து விடப் போகிறது.

பேசும் பொழுதோ
தொலைக்காட்சி பார்க்கும் பொழுதோ
எரியாத கலோரிகள்
தூங்கும் பொழுதுதான்
அதிகமாய் எரியும்
தெரியுமா உனக்கு?

எல்லாமே அறிவியல்தானா?
எதற்கும் ஒரு விளக்கம்தானா?

அறிவியல் என்பது வாழ்வு
ஏன் என்று கேட்பதனால்தான்
எண்ணற்ற பதில்கள் கிடைக்கின்றன.

இதோ இறங்கும் இடம்
இதற்குமேல் வாகனம் செல்லாது.
இயற்கை காணலாம் வா.

நிச்சயம் இறங்க வேண்டுமா?
நிசப்தமாக இருக்கும் இந்த
இடத்தை கண்டவுடனே
இனமறியா பயம் ஒட்டிக்கொள்கிறதே.

பயம் என்பது
பயனில்லாதது.
அப்படி ஒரு பொருளே
அவனியில் இல்லை.

இருள் பரப்பும்
கருவி எங்குமில்லை
ஒளியில்லாத இடம்
இருளாகிறது - அதுபோல்
தைரியம் மரிப்பதால்
தரிப்பதே பயம்.

பயம் யாதென்பதற்கு
பதிலளித்தீர்
அதைப் போக்க ஏதும்
அனுகுமுறை உண்டா?


(தொடரும்...)

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

0 comments:

இங்கே கண்தடம் பதித்தவர்கள்

நாட்காட்டி

தமிழ்வெளி

More than a Blog Aggregator

தமிழ் கணிமை

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

Thiratti.com

அதிகாலை

Instant dynamic Tamil News Portal