என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

Thursday, April 24, 2008

ஹைக்கூ முயற்சி

1.
நான்கு வருடமும்
நான்கு நொடியாகியது
கல்லூரியின் இறுதி நாள்.

2.
மறந்துவிட்ட பழைய
காதலின் எண்ணங்கள்
சன்னோலரப் பேருந்துப் பயணம்.

3.
மேனிதொடும் வெளிநாட்டின்
மழைத்தூறல் நிணைவெங்கும்
ஊரிலிருக்கும் குழந்தையின் ஸ்பரிசம்.

4.
அப்பாவின் கண்ணில்
ஆனந்தக் கண்ணீர், எனக்கு
வேலை கிடைத்து விட்டது.

5.
இரவு நீண்டுகொண்டே
இருக்கிறது, கையில்
கொடுக்கவிருக்கும் காதல் கடிதம்.

6.
தொலைபேசி அருகிலேயே
தாய், விமானத்தில்
நான்.

7.
தெருவில் வீட்டின் தூரம்
உணரவைக்கிறது அடக்கமுடியாத
செறித்துவிட்ட தண்ணீர்.

8.
சீக்கிரம் வந்துவிட்ட தந்தை
அரைப்பரீட்சையில் தேராத
மதிப்பெண் அட்டையுடன் நான்.

9.
எப்படி சொல்வது
தனிக்குடித்தனம் போவதை
உடம்பு சரியில்லையாவென கேட்கும் தாய்.

10.
நுழைகின்ற வீட்டில்
நிறைந்திருக்கும் வெறுமை
அம்மாவின் மரணம்.

2 comments:

said...

un kirukalgal ennai theliya vaithuvittana. nanri nanba

said...

நன்றி ஷெர்லி.

இங்கே கண்தடம் பதித்தவர்கள்

நாட்காட்டி

தமிழ்வெளி

More than a Blog Aggregator

தமிழ் கணிமை

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

Thiratti.com

அதிகாலை

Instant dynamic Tamil News Portal