என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

Monday, September 22, 2008

அனாதைகள்

கூக்குரலுடனும்
பேரிரைச்சலுடனும்
அவலங்களாய்
அங்கலாய்ப்புகளாய்
அலைந்து கொண்டிருந்தன!

பூக்கடை ஓரத்தில்
பேருந்து நெரிசலில்
நீதிமன்றத்தின் வாசலில்
அரசியல் மேடைகளில்
ஆங்காங்கே அழுதுகொண்டிருந்தன!

எங்கேயும் அனாதைகளை
ஏனென்று கேட்க ஆளில்லை
எனினும், எனதல்ல என்று
கூறுவதற்கு எல்லோரும்
கூடினர், கூவினர்!

பெற்றோர்களே இவைகளைப்
பிறருக்குப் பிறந்தவையென
அடையாளமிட்டு
அலைக்கழித்தனர்
ஆசுவாசப்பட்டனர்!

பெற்றோர்களை அறிந்தும்
பேசமுடியாது முடமான
அனாதைகள் அனைவரையும்
அடையாளப் படுத்தினேன், அவைகள்
தோல்விகளும் தவறுகளும்தான்!

0 comments:

இங்கே கண்தடம் பதித்தவர்கள்

நாட்காட்டி

தமிழ்வெளி

More than a Blog Aggregator

தமிழ் கணிமை

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

Thiratti.com

அதிகாலை

Instant dynamic Tamil News Portal