என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

Thursday, September 18, 2008

நானாக இருந்தால்?

நியாய விலைக்கடையில்
சர்க்கரை இல்லை,
கூடுதல் காசுகொடுத்தால்
கொட்டிக் கிடைக்கிறது

எட்டு போட்டாலும்
ஓட்டுனர் உரிமமில்லை
லஞ்சம் கொடுத்தால்
உடனே கிடைக்கிறது

பாஸ்போர்ட் வாங்க
பல சான்றிதழும் போதாது
காவல்நிலையத்தில் கையூட்டு
கொடுத்தால் நிச்சயம் கிடைக்கிறது

மின்சாரமிழுக்க படிவம்
மட்டும் பத்தாது
காசு கொடுத்தால்தான்
கேபிளும், கம்பமும் கிடைக்கிறது

சில அரசு வேலையில்
சேர அறிவிருந்து பயனேது
சிலரின் சிபாரிசோ
சில்லறையோ இருப்பின் கிடைக்கிறது

வாகனத்தில் செல்ல
அவசியச் சான்றிதழ்கள் பத்தாது
வழிநெடுக கொடுக்க
வாய்க்கரிசியும் இருந்தால் போதுமானது

செய்தித்தாளில் ஒரு செய்தி
"லஞ்சம் கேட்ட அதிகாரிகள்; தொடர்கடத்தல்"
இதற்கெல்லாம் ஒருவன் மட்டும் கூடாது
இன்னும் நூறுபேர் வந்தால் போதுமானது

இது எல்லாம் அப்பாவின் புலம்பல்...

கடத்திச் செல்பவர்களில் நானும்
உண்டென்று அப்பாவிடம் சொல்லக் கூடாது
சொன்னால், எனைத் தடுத்துச் சொல்வார்
லஞ்சம் கொடுப்பதே மேலானது

0 comments:

இங்கே கண்தடம் பதித்தவர்கள்

நாட்காட்டி

தமிழ்வெளி

More than a Blog Aggregator

தமிழ் கணிமை

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

Thiratti.com

அதிகாலை

Instant dynamic Tamil News Portal