என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

Friday, September 5, 2008

தாவணிக் கவிதைகள்



எல்லோரும் மழைநேரத்தில்
வானவில்லைப் பார்க்க
வானம் பார்த்து நிற்க
தாவணியோடு நீ
தரைதொட்டுத் தவழுவதைப்
பார்த்து வானவில்லென்று கத்திவிட்டேன்!

~~~~~^^^^^~~~~~^^^^^~~~~~

பாவாடைச் சட்டைகளில்
குறும்புகளை ஓரங்கட்டிவிட்டு
தாவணிக்கு நீ தாவியதும்
தவழ்ந்து வந்தது வெட்கம்

~~~~~^^^^^~~~~~^^^^^~~~~~

மொட்டை மாடியில்
மழை நனைக்குமுன்
துணிகளை எடுக்க வந்த
நாமிருவரும் முதன்முதலாய்
சந்தித்த போது நனைந்தது
மழையால் துணியும்
காதலால் மனமும்

~~~~~^^^^^~~~~~^^^^^~~~~~

நீ அவ்வப்பொழுது
நழுவிடும் தாவணியை
சரி செய்துவிடும் போதெல்லாம்
சரிந்து விழுகிறேன் நான்

~~~~~^^^^^~~~~~^^^^^~~~~~

0 comments:

இங்கே கண்தடம் பதித்தவர்கள்

நாட்காட்டி

தமிழ்வெளி

More than a Blog Aggregator

தமிழ் கணிமை

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

Thiratti.com

அதிகாலை

Instant dynamic Tamil News Portal