என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

Saturday, August 30, 2008

ஈசனுக்குப் பாதிதானே

ஈசனுக்கு கூட பாதிமனம் இடப்பக்கம் மட்டுமே
என் நேசனுக்கு நான் முழுப்பக்கம் ஆனேனே
பிறந்து வளர்ந்த இடம் மறந்து மணத்தாலிடம்
பெயர்ந்து வாழ்வதும் புதிய ஜனனமே ஆகிடும்

உன் காதலால் கசிந்து வளைகிறேன் நாணலாய்
என் காதலா நின்னன்புகண்டு பொழிகிறேன் தூறலாய்
பெண்ணிடத்து நீ கொண்ட பண்புதனில் சிலிர்க்கிறேன்
உன்னிடத்தே வாழ்ந்துன் மடியிலேயே மடிகிறேன்

புதியதென எல்லாமும் புலம்பெயர மாறுமே - இருப்பினும்
பழகியதென நீயதை மணம் முடிக்கும் முன்பே
மாற்றினையே மணாளா, தேனாய் என் காதிலின்று
ஊற்றினையே காவலா, புதிதாய் பிறந்தேனே நானின்று

சொந்தமென்று என்னை மட்டும் நம்பி நின்ற பெற்றோரை
உந்தன் உறவென்று போற்றி குடிபெயரச் சொன்னவரே
ஈசனுக்கு கூட பாதிமனம் இடப்பக்கம் மட்டுமே
என் நேசனுக்கு நான் முழுப்பக்கம் ஆனேனே!

0 comments:

இங்கே கண்தடம் பதித்தவர்கள்

நாட்காட்டி

தமிழ்வெளி

More than a Blog Aggregator

தமிழ் கணிமை

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

Thiratti.com

அதிகாலை

Instant dynamic Tamil News Portal