உங்க மனசு யாருக்கும் வராது,
நீங்க எதுவும் தயங்காம சொல்லுங்க.
நேற்று இரவு
மருத்துவமனை சட்டத்திற்காக என்னிடம்
கையெழுத்து கேட்டார்கள் - நீங்கள் அவர்
கணவரா, சட்டென்று கையெழுத்திடுங்கள் என்று
வெள்ளை உடையில் வந்த தந்தி போல் ஒப்பித்தார்கள்
வழியேதும் தோன்றாமல்
கணவனென்று கையொப்பமிட்டு விட்டேன்
மன்னித்து விடுங்கள்.
பரவாயில்லைங்க,
பல நேரத்தில் இப்படித்தான்
நீங்க தாமதிச்சுருந்தீங்கன்னா என்னாயிருக்குமோ?
நீங்க வருத்தப்பட இதுல ஒன்னுமில்லை.
நான் சொன்ன வார்த்தை கேட்டு
நெஞ்சோரம் ஒரு புன்னகை செய்தாய்.
நீங்க செய்த உதவிக்கு
நாங்க ஏதாவது செய்யணும்.
கண்டிப்பா வீட்டுக்கு வாங்க - என்
கண்ணும், மனசும் குளிர உங்களுக்கு
எங்க வீட்ல விருந்து வைக்கணும்
என அன்புக் கட்டளையிட்டாள்.
ஒரு வாரம் கழித்து.
ஒருவரிடமும் சொல்லமலேயே
உன் வீடு வந்தேன்
என் வரவு சாதரணமாகவே இருக்கட்டுமென்று.
வாங்க, வாங்க
எப்படி இருக்கீங்க என்றாய்.
உனது பெற்றோர் எங்கே என்றேன்.
உங்கள் ஊருக்கு சென்றிருக்கிறார்களென்றாய்.
ஏன் என்றேன் - சொல்வதற்கு முன்
எனது கேள்விக்கு பதில் சொல்லுங்களென்றாய்.
எதுவும் புரியாதவனாய்
எது உனது கேள்வியென்றேன்.
எந்தன் வாழ்க்கைக்கு
நீங்கள் துணையாக இருக்க வேண்டும்
உங்கள் வீட்டில்
நான் விளக்கேற்ற வேண்டும் என்றாய்.
எதிர்பாரமல் வருவதுதான் காதல்
என கேள்விப் பட்டது
சத்தியமான உண்மையென உணர்ந்தேன்.
சில நாள் முன்புதான் பார்த்தோம்,
இன்னும் பழகவில்லை
இன்று கல்யாணம் என்கிறாயே என்றேன்.
(தொடரும்...)
முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து
என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்
என்னைப் பற்றி...
படைப்புகளை மின்னஞ்சலில் பெற...
Showing posts with label கானகம். Show all posts
Showing posts with label கானகம். Show all posts
Wednesday, October 29, 2008
Monday, October 20, 2008
காதல், கானகம் - பகுதி 14
ஆசிரியரின் கேள்விக்கு விடையறிந்த
மாணவன் போல்
முகம் மலர்ந்து சொன்னாள்.
அது எனக்கே தெரியும்.
ஆண்டவனால் உருவாக்கப்பட்டது.
கேளடி என் கண்மனி,
காது தீட்டிக் கேள்.
மனித இனம் முளைத்தது
மனிதக் குரங்கிலிருந்துதான்.
பதினைந்து இலட்சம் வருடத்திற்கு முன்புதான்
சிம்பன்ஸியிடமிருந்து மனிதன் பிரிந்திருக்கிறான்.
மிகப் பழைய தற்கால மனிதனின்
மண்டை ஓடு ஆதாரத்துடன் சிக்கியது சுமார்
இரண்டு இலட்சம் வருடத்திற்கும் முன்பானது.
பெண் என்பவள் கருசுமப்பதால்
பெரும்பாலும் பாதுகாப்பாகவே இருக்கிறாள்.
ஆண்தான் வேட்டையாடி
உணவு கொணர்ந்து வருவான்.
மனிதனின் முதல் கண்டுபிடிப்பு
முனைப்பான கருவிகள்தாம்.
கற்களை வைத்தே
கருவிகள் செய்தான்.
மிருகம் கொன்றான், பச்சை
மாமிசம் உண்டான்.
அவனுடைய அடுத்த கண்டுபிடிப்பு
அளவிடற்கறியாத ஒன்று.
ஆம், நெருப்பு.
காட்டுத்தீ கண்டு பயந்தவன்,
கற்களில் தீ கண்டு மகிழ்ந்தான்.
சுட்டுத் தின்றான்,
சமையல் அறிந்தான்.
கூட்டமானான்,
குகைகளில் வீடு கொண்டான்.
விலங்கிலிருந்தும், மற்ற மனிதனிடத்தும் தற்காத்து
வாழ்ந்துகொள்ள சண்டையிட்டான்.
திசைகள் அறிந்தான்
தலைவன் ஒருவன் உருவானான்.
பேச ஒரு மொழி கொண்டான்,
படங்களாக எழுத்துக்கள் கண்டான்.
சிந்தித்தான்,
பேசினான்,
தர்க்கம் செய்தான்,
சண்டையிட்டான்,
முடிவு கண்டான்,
சட்டம் செய்தான்,
மீறியவனை கொன்றான்,
காடு கடத்தினான்.
குளிர் கொண்டான்,
காப்பாற்றிக் கொள்ள
விலங்குத் தோலுறித்து ஆடை கொண்டான்,
வினோதம் துவக்கினான்.
ஒருத்தியிடமே உறவென்றான்
மற்றவர்கள் அவளைத் தொடக் கூடாதென்றான்.
இல்லறம் கண்டான்,
என் மனைவி,
என் மக்கள்
என் இடம்,
என் சமுதாயம் என்றான்.
(தொடரும்...)
முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து
[அடுத்தப் பகுதி வந்ததும் இது வேலை செய்யும்]
மாணவன் போல்
முகம் மலர்ந்து சொன்னாள்.
அது எனக்கே தெரியும்.
ஆண்டவனால் உருவாக்கப்பட்டது.
கேளடி என் கண்மனி,
காது தீட்டிக் கேள்.
மனித இனம் முளைத்தது
மனிதக் குரங்கிலிருந்துதான்.
பதினைந்து இலட்சம் வருடத்திற்கு முன்புதான்
சிம்பன்ஸியிடமிருந்து மனிதன் பிரிந்திருக்கிறான்.
மிகப் பழைய தற்கால மனிதனின்
மண்டை ஓடு ஆதாரத்துடன் சிக்கியது சுமார்
இரண்டு இலட்சம் வருடத்திற்கும் முன்பானது.
பெண் என்பவள் கருசுமப்பதால்
பெரும்பாலும் பாதுகாப்பாகவே இருக்கிறாள்.
ஆண்தான் வேட்டையாடி
உணவு கொணர்ந்து வருவான்.
மனிதனின் முதல் கண்டுபிடிப்பு
முனைப்பான கருவிகள்தாம்.
கற்களை வைத்தே
கருவிகள் செய்தான்.
மிருகம் கொன்றான், பச்சை
மாமிசம் உண்டான்.
அவனுடைய அடுத்த கண்டுபிடிப்பு
அளவிடற்கறியாத ஒன்று.
ஆம், நெருப்பு.
காட்டுத்தீ கண்டு பயந்தவன்,
கற்களில் தீ கண்டு மகிழ்ந்தான்.
சுட்டுத் தின்றான்,
சமையல் அறிந்தான்.
கூட்டமானான்,
குகைகளில் வீடு கொண்டான்.
விலங்கிலிருந்தும், மற்ற மனிதனிடத்தும் தற்காத்து
வாழ்ந்துகொள்ள சண்டையிட்டான்.
திசைகள் அறிந்தான்
தலைவன் ஒருவன் உருவானான்.
பேச ஒரு மொழி கொண்டான்,
படங்களாக எழுத்துக்கள் கண்டான்.
சிந்தித்தான்,
பேசினான்,
தர்க்கம் செய்தான்,
சண்டையிட்டான்,
முடிவு கண்டான்,
சட்டம் செய்தான்,
மீறியவனை கொன்றான்,
காடு கடத்தினான்.
குளிர் கொண்டான்,
காப்பாற்றிக் கொள்ள
விலங்குத் தோலுறித்து ஆடை கொண்டான்,
வினோதம் துவக்கினான்.
ஒருத்தியிடமே உறவென்றான்
மற்றவர்கள் அவளைத் தொடக் கூடாதென்றான்.
இல்லறம் கண்டான்,
என் மனைவி,
என் மக்கள்
என் இடம்,
என் சமுதாயம் என்றான்.
(தொடரும்...)
முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து
[அடுத்தப் பகுதி வந்ததும் இது வேலை செய்யும்]
Friday, October 17, 2008
காதல், கானகம் - பகுதி 13
ம்...ம்...
சொல்லுங்கள், எந்தக் களை கண்டீர்?
ஒரு குழந்தை போல் நீ.
ஓயாமல் ஒரு விஷயத்தை கேட்கின்றாய்
விடை தெரியும் வரை,
வினா உன்னுடையதென்றால்.
சொல்கிறேன் கேள்.
அறிந்த சான்றோர்கள் கூறும்
அளவிடதற்கரிய அறிவுரைகள் ஏராளம்.
இதனிடையே மூடர்கள் சொன்னதும்
இடைச் செறுகல்களாய் வளர்ந்தது.
உதாரணம் உரைக்கின்றேன் கேள்.
உடன்கட்டை ஏறுதல்,
பெண்களுக்கு உரிமை வழங்க மறுத்தல்,
பெண்னை கற்புடையவள் எனக்காட்ட முதலிரவுக்குப் பின்
குருதி படிந்த வெள்ளைச் சீலையை
குடிமக்கள் காண உலர்த்துதல்,
இன்னும் ஏராளம்....
கடவுள் பெயரால் பலமக்களை
கழுவில் ஏற்றினார்கள்.
பெறுதற்கறிய மருத்துவக் குறிப்பை
ஆற்றில் விட்டார்கள்,
சாதி பிரித்தார்கள் - சில சாதியினரை
சவம் போல் மதித்தார்கள்.
கேட்கவே குரூரமாய் இருக்கின்றது அத்தான்.
கேடு கொண்ட சாதி எதற்குப் பிறந்தது?
சாதி கேடு கொண்டதல்ல,
சந்தர்ப்ப வாதிகளால் மாறியதுதான் கேடு.
மந்திரம் ஓத ஒரு சாதி,
மயிர் மழிக்கும் தொழிலுக்கு ஒரு சாதி,
வணிகம் செய்ய ஒரு சாதி,
வன்கடல் சென்று மீன் பிடிக்க ஒரு சாதி,
மறப் போர் செய்ய ஒரு சாதி,
மரவேலை செய்ய ஒரு சாதி,
இரும்படிக்க ஒரு சாதி,
பெரும் பணம் கடன் கொடுக்க ஒரு சாதி,
குடியாள ஒரு சாதி,
காடு காக்க ஒரு சாதி,
துணி வெளுக்க ஒரு சாதி,
ஆடற்கலை வளர்க்க ஒரு சாதி
இப்படி இன்னும் எத்தனையோ சாதிகள்.
இத்தனை சாதிப் பிரிவுகள் ஏன் என
ஈடுபாட்டோடு கேட்டாள்
தொழில் ஒவ்வொன்றும்
தலைமுறை தலைமுறையாகச்
செய்தால், கலை வளரும்,
செவ்வனே காரியங்கள் முடியும்.
காலப் போக்கில் அதற்கான
காரணங்கள் மறந்து,
இழி தொழிலைச் செய்வோன்
இவன் என சில தொழில் செய்வோரை
வசைமொழி பாடினார்கள்
வாழும் முறை மறந்தார்கள்.
கடவுள் பெயரைச் சொல்லி
காமுகர்கள் கற்பைச் சூறையாடினார்கள்.
மதமென்னும் அன்பு மொழியில்,
மதமேறி நஞ்சு கலந்தார்கள்.
நல்லாட்சி செய்ய சாதி பிறந்தது - இப்போது
ஆட்சி பிடிக்கவே சாதிகள் வளர்க்கப் படுகிறது.
மதங்கள் எப்படி வந்தது
என்று சொல்கிறேன் கேள்.
(தொடரும்...)
முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து
சொல்லுங்கள், எந்தக் களை கண்டீர்?
ஒரு குழந்தை போல் நீ.
ஓயாமல் ஒரு விஷயத்தை கேட்கின்றாய்
விடை தெரியும் வரை,
வினா உன்னுடையதென்றால்.
சொல்கிறேன் கேள்.
அறிந்த சான்றோர்கள் கூறும்
அளவிடதற்கரிய அறிவுரைகள் ஏராளம்.
இதனிடையே மூடர்கள் சொன்னதும்
இடைச் செறுகல்களாய் வளர்ந்தது.
உதாரணம் உரைக்கின்றேன் கேள்.
உடன்கட்டை ஏறுதல்,
பெண்களுக்கு உரிமை வழங்க மறுத்தல்,
பெண்னை கற்புடையவள் எனக்காட்ட முதலிரவுக்குப் பின்
குருதி படிந்த வெள்ளைச் சீலையை
குடிமக்கள் காண உலர்த்துதல்,
இன்னும் ஏராளம்....
கடவுள் பெயரால் பலமக்களை
கழுவில் ஏற்றினார்கள்.
பெறுதற்கறிய மருத்துவக் குறிப்பை
ஆற்றில் விட்டார்கள்,
சாதி பிரித்தார்கள் - சில சாதியினரை
சவம் போல் மதித்தார்கள்.
கேட்கவே குரூரமாய் இருக்கின்றது அத்தான்.
கேடு கொண்ட சாதி எதற்குப் பிறந்தது?
சாதி கேடு கொண்டதல்ல,
சந்தர்ப்ப வாதிகளால் மாறியதுதான் கேடு.
மந்திரம் ஓத ஒரு சாதி,
மயிர் மழிக்கும் தொழிலுக்கு ஒரு சாதி,
வணிகம் செய்ய ஒரு சாதி,
வன்கடல் சென்று மீன் பிடிக்க ஒரு சாதி,
மறப் போர் செய்ய ஒரு சாதி,
மரவேலை செய்ய ஒரு சாதி,
இரும்படிக்க ஒரு சாதி,
பெரும் பணம் கடன் கொடுக்க ஒரு சாதி,
குடியாள ஒரு சாதி,
காடு காக்க ஒரு சாதி,
துணி வெளுக்க ஒரு சாதி,
ஆடற்கலை வளர்க்க ஒரு சாதி
இப்படி இன்னும் எத்தனையோ சாதிகள்.
இத்தனை சாதிப் பிரிவுகள் ஏன் என
ஈடுபாட்டோடு கேட்டாள்
தொழில் ஒவ்வொன்றும்
தலைமுறை தலைமுறையாகச்
செய்தால், கலை வளரும்,
செவ்வனே காரியங்கள் முடியும்.
காலப் போக்கில் அதற்கான
காரணங்கள் மறந்து,
இழி தொழிலைச் செய்வோன்
இவன் என சில தொழில் செய்வோரை
வசைமொழி பாடினார்கள்
வாழும் முறை மறந்தார்கள்.
கடவுள் பெயரைச் சொல்லி
காமுகர்கள் கற்பைச் சூறையாடினார்கள்.
மதமென்னும் அன்பு மொழியில்,
மதமேறி நஞ்சு கலந்தார்கள்.
நல்லாட்சி செய்ய சாதி பிறந்தது - இப்போது
ஆட்சி பிடிக்கவே சாதிகள் வளர்க்கப் படுகிறது.
மதங்கள் எப்படி வந்தது
என்று சொல்கிறேன் கேள்.
(தொடரும்...)
முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து
Thursday, October 16, 2008
காதல், கானகம் - பகுதி 12
வாருங்கள் அத்தை, நீங்களும்
உண்ணுங்கள் என்றாள்.
நீங்கள் உண்ட பிறகு
நானுண்பேன்.
வீடு திரும்பும் நேரம் எப்பொழுதோ!
வயிறாற சாப்பிடுங்கள்.
அத்தான், இந்த பழக்கம் எதனால்
அரும்பியதென்று தெரியுமா உங்களுக்கு?
தெரியும் ஆதவளே!
தெளிவிக்கிறேன் கேள்.
சமையலைச் சுவையாய் செய்வதைவிட,
சமயமறிந்து இடுவதிலும் சிறப்பு இருக்கிறது.
கொடுப்பது பழைய கஞ்சியானாலும்,
கூட எது சேர்த்தால் சுவையென்று கணக்கிருக்கிறது.
முதலில் எதை உண்ன வேண்டும்,
எவையில் எவை சேர வேண்டுமென்பது கலை.
அவைகள் கலையை
அறிந்தவர்களுக்கே தெரியும்.
என்னே வியப்பு!
எண்ணிக்கையில்லாத சம்பிரதாயங்கள்
வியந்தாள் ஆதவள்!
ஆம்.
அறிவில் சிறந்த பல
கருத்துக்களை கூறியிருக்கிறார்கள் - ஆனாலும்
காரணமறிந்து செய்வதே சிறப்பு.
அழகிய நெல் வயலான சம்பிரதாயங்களிடையே
ஆங்காங்கே களைகளும் இருக்கும்.
என்ன களைகண்டீர்?
எதுவும் இருப்பதாக தெரியவில்லையே!
கை கழுவு,
காலாற நடப்போம்.
போகின்ற வழியில்
போதியவற்றை சொல்கின்றேன்.
மகிழ்வுந்து எடுத்துப்போ!
மழை பொழியுமாறு இருக்கிறது.
மெதுவாகச் செல்,
தெருவிளக்குகள் எரியுமுன் வந்துவிடு
என்றார் நாகய்யன்.
ஆகட்டும் தந்தையே.
அப்படியே செய்கிறேன்.
எங்கு வரை செல்கிறாய்
என்றாள் மலர்.
அருகிலுள்ள பூங்காவிற்கு என்று
கண் மறைத்துப் பதில் சொன்னான் காதல்.
மகிழ்வுந்து முன் கதவு திறந்து
மெல்லியவளை அமரச் செய்தான்.
புறப்பட ஆயத்தமானான்.
பாதுகாப்புப் பட்டையை அனிந்து கொள்ளுங்கள்,
பதைத்தான் நாகய்யன்.
பக்குவமாய் சென்று,
பத்திரமாய் திரும்புங்கள்,
பாசமுரைத்தாள் மலர்.
களிமுகம் செய்தான்,
கன்னியிடம், செல்லலாமா? என்றான்.
மகிழ்ச்சி வெள்ளத்தில், புன்சிரிப்போடு
ம்...ம்.... என்றாள்.
புறப்பட்டது மகிழ்வுந்து!
(தொடரும்...)
முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து
உண்ணுங்கள் என்றாள்.
நீங்கள் உண்ட பிறகு
நானுண்பேன்.
வீடு திரும்பும் நேரம் எப்பொழுதோ!
வயிறாற சாப்பிடுங்கள்.
அத்தான், இந்த பழக்கம் எதனால்
அரும்பியதென்று தெரியுமா உங்களுக்கு?
தெரியும் ஆதவளே!
தெளிவிக்கிறேன் கேள்.
சமையலைச் சுவையாய் செய்வதைவிட,
சமயமறிந்து இடுவதிலும் சிறப்பு இருக்கிறது.
கொடுப்பது பழைய கஞ்சியானாலும்,
கூட எது சேர்த்தால் சுவையென்று கணக்கிருக்கிறது.
முதலில் எதை உண்ன வேண்டும்,
எவையில் எவை சேர வேண்டுமென்பது கலை.
அவைகள் கலையை
அறிந்தவர்களுக்கே தெரியும்.
என்னே வியப்பு!
எண்ணிக்கையில்லாத சம்பிரதாயங்கள்
வியந்தாள் ஆதவள்!
ஆம்.
அறிவில் சிறந்த பல
கருத்துக்களை கூறியிருக்கிறார்கள் - ஆனாலும்
காரணமறிந்து செய்வதே சிறப்பு.
அழகிய நெல் வயலான சம்பிரதாயங்களிடையே
ஆங்காங்கே களைகளும் இருக்கும்.
என்ன களைகண்டீர்?
எதுவும் இருப்பதாக தெரியவில்லையே!
கை கழுவு,
காலாற நடப்போம்.
போகின்ற வழியில்
போதியவற்றை சொல்கின்றேன்.
மகிழ்வுந்து எடுத்துப்போ!
மழை பொழியுமாறு இருக்கிறது.
மெதுவாகச் செல்,
தெருவிளக்குகள் எரியுமுன் வந்துவிடு
என்றார் நாகய்யன்.
ஆகட்டும் தந்தையே.
அப்படியே செய்கிறேன்.
எங்கு வரை செல்கிறாய்
என்றாள் மலர்.
அருகிலுள்ள பூங்காவிற்கு என்று
கண் மறைத்துப் பதில் சொன்னான் காதல்.
மகிழ்வுந்து முன் கதவு திறந்து
மெல்லியவளை அமரச் செய்தான்.
புறப்பட ஆயத்தமானான்.
பாதுகாப்புப் பட்டையை அனிந்து கொள்ளுங்கள்,
பதைத்தான் நாகய்யன்.
பக்குவமாய் சென்று,
பத்திரமாய் திரும்புங்கள்,
பாசமுரைத்தாள் மலர்.
களிமுகம் செய்தான்,
கன்னியிடம், செல்லலாமா? என்றான்.
மகிழ்ச்சி வெள்ளத்தில், புன்சிரிப்போடு
ம்...ம்.... என்றாள்.
புறப்பட்டது மகிழ்வுந்து!
(தொடரும்...)
முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து
Wednesday, October 15, 2008
காதல், கானகம் - பகுதி 11
அவர் உண்ணாத அன்னம்
எனக்கெதற்கு? - அவர்
உண்டதைக் கண்ட பிறகே
உணவைத் தொடுவேன்.
அடி கொடியே,
நீ சொல்வது பழைய பாடம்.
நீண்ட கடல் கடந்து
வணிகம் செய்யப் போனேனாயின்
வரும் வரை உண்ணாமல் இருப்பாயா?
பேதையே வறியவற்கு உணவளிக்க வேண்டும்,
பசிக்கும் வயிற்றிற்கும் உணவளிக்க வேண்டும்.
எந்தக் கணவன் மனைவி வரும் வரை
எதையுமுண்ணாமல் இருந்திருக்கிறான்?
போதும் நீங்கள் சொல்வது.
பழங்கதைகள் காட்டுவதும், என் தாயின்
பழக்கங்களும் மடமை என்கிறீர்களா?
பைங்கிளியே கேள்.
கிளிதான் சொன்னதையேச் சொல்லும்,
உன் தாய் சொன்னாலும் மடமை
உண்மையாகி விடாது.
மின்சாரம் இல்லாத அந்தக் காலத்தில்
காடு சென்றாலும் மாலைக்குள்
வீடு வந்துவிடுவர் ஆடவர்கள்.
இன்றைய நிலை வேறு.
காலத்திற்கேற்ப கருவிகள் மாறும்.
காட்சிகள் மாறும் - இன்றைய வாழ்க்கைகேற்ப
முரணான கூற்றுகளும் மாறும்.
மாற்றங்கள் ஒன்றே மாறாதது, உணர்ந்து கொள்.
உனக்குப் பசியெடுப்பின் நீதான்
உண்ண வேண்டும், என் பசிக்கு நான்!
ஒரு குவளை சோறுதான் இருக்கிறதென்றால்
"மானுண்டெஞ்சிய கழலி நீர்" போல் உண்ண வேண்டும்.
ஒத்துக்கொள்கிறேன்.
காதெட்டா தூரம் நீங்கள் சென்றால்
கருத்தோடு உங்கள் சொல்படி நடக்கிறேன் - ஆனால்
நிழல் தொடும் தூரத்தில்
நீங்கள் இருக்க, நான் மட்டும் பசியாறவா?
உணவு உண்ணும் வேளையில்
ஊடல் இருந்தாலும் மறப்போம்.
சிறு சண்டையிட்டுப் பிரிந்தாலும்
சோறு உண்ணும் வேளையில்
தேடல் கொள்வோம்.
கடல் கடந்து இருந்தாலும்,
சிறிதே தும்மலிடச் செய்வோம்!
அழகான பாடம்
அரும்பினாய்.
ஆழமான கருத்துக்கள்.
கற்றுக் கொடுப்பவருக்கும் கற்றுக் கொள்ள
கடலளவு இருக்கிறதென்று சுட்டினாய்.
வா அன்னமே, அன்னம் உண்போம்.
உணவு பரிமாறிவிட்டு,
உண்ணுங்கள் என்று கூறி
அருகிலேயே நின்று கொண்டாள்,
அன்னை, மலர்.
(தொடரும்...)
முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து
எனக்கெதற்கு? - அவர்
உண்டதைக் கண்ட பிறகே
உணவைத் தொடுவேன்.
அடி கொடியே,
நீ சொல்வது பழைய பாடம்.
நீண்ட கடல் கடந்து
வணிகம் செய்யப் போனேனாயின்
வரும் வரை உண்ணாமல் இருப்பாயா?
பேதையே வறியவற்கு உணவளிக்க வேண்டும்,
பசிக்கும் வயிற்றிற்கும் உணவளிக்க வேண்டும்.
எந்தக் கணவன் மனைவி வரும் வரை
எதையுமுண்ணாமல் இருந்திருக்கிறான்?
போதும் நீங்கள் சொல்வது.
பழங்கதைகள் காட்டுவதும், என் தாயின்
பழக்கங்களும் மடமை என்கிறீர்களா?
பைங்கிளியே கேள்.
கிளிதான் சொன்னதையேச் சொல்லும்,
உன் தாய் சொன்னாலும் மடமை
உண்மையாகி விடாது.
மின்சாரம் இல்லாத அந்தக் காலத்தில்
காடு சென்றாலும் மாலைக்குள்
வீடு வந்துவிடுவர் ஆடவர்கள்.
இன்றைய நிலை வேறு.
காலத்திற்கேற்ப கருவிகள் மாறும்.
காட்சிகள் மாறும் - இன்றைய வாழ்க்கைகேற்ப
முரணான கூற்றுகளும் மாறும்.
மாற்றங்கள் ஒன்றே மாறாதது, உணர்ந்து கொள்.
உனக்குப் பசியெடுப்பின் நீதான்
உண்ண வேண்டும், என் பசிக்கு நான்!
ஒரு குவளை சோறுதான் இருக்கிறதென்றால்
"மானுண்டெஞ்சிய கழலி நீர்" போல் உண்ண வேண்டும்.
ஒத்துக்கொள்கிறேன்.
காதெட்டா தூரம் நீங்கள் சென்றால்
கருத்தோடு உங்கள் சொல்படி நடக்கிறேன் - ஆனால்
நிழல் தொடும் தூரத்தில்
நீங்கள் இருக்க, நான் மட்டும் பசியாறவா?
உணவு உண்ணும் வேளையில்
ஊடல் இருந்தாலும் மறப்போம்.
சிறு சண்டையிட்டுப் பிரிந்தாலும்
சோறு உண்ணும் வேளையில்
தேடல் கொள்வோம்.
கடல் கடந்து இருந்தாலும்,
சிறிதே தும்மலிடச் செய்வோம்!
அழகான பாடம்
அரும்பினாய்.
ஆழமான கருத்துக்கள்.
கற்றுக் கொடுப்பவருக்கும் கற்றுக் கொள்ள
கடலளவு இருக்கிறதென்று சுட்டினாய்.
வா அன்னமே, அன்னம் உண்போம்.
உணவு பரிமாறிவிட்டு,
உண்ணுங்கள் என்று கூறி
அருகிலேயே நின்று கொண்டாள்,
அன்னை, மலர்.
(தொடரும்...)
முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து
Tuesday, October 14, 2008
காதல், கானகம் - பகுதி 10
கல்வி என்பது
முடிவிலாதது,
கற்பதற்காக நேரத்தை
விற்பதில்தான் இருக்கிறது
வியாபாரம்.
உலகம் காண செல்கின்றோம்,
வீட்டு சன்னல் வழியாக இவள்
வாசித்த வாழ்க்கையை,
வாழ்வின் வாசலுக்கு கொண்டு சென்று
அறிவுபெற
அழைத்துச் செல்கிறேன்.
மாங்கனி போல சுவையாய் பேசும் என்
மருமகளுக்கு மதி குறைவு என்கிறாயா?
வந்தாலே வீட்டை ஒளிரச் செய்பவளுக்கு
வாழ்க்கையைக் காட்டப் போகிறாயா?
மதி என்ற பெயரையே
மாற்றச் சொல்லிவிட்டார்
உங்கள் மகன்.
இனி மற்றது பேசி எதற்கு?
சரி, ஆகட்டும்.
ஆகாரம் உண்டு
பிறகு செல் என்றார்.
செவிக்கும் கண்ணுக்கும் உணவு தேடிச்
சென்று கொண்டிருக்கிறோம்.
வயிற்றுக்கு உணவு
வேண்டுமெனில் வந்துவிடுகிறோம்
வீட்டிற்கு என்றான் காதல்.
மதி, நீ
சாப்பிட்டு விட்டுப்போம்மா.
அவன் பசி பொறுப்பான்,
அகிலமே உணவென்பான்,
மழை நனைவான்,
வெயில் சுமப்பான்,
உலகே குடையென்பான்.
வீட்டிற்கு வந்த உன்னை
வெறும் வயிற்றோடு அனுப்ப மாட்டேன்.
அன்னம் பருகிக் கொள், பின்
அனைத்தும் தெரிந்து கொள்.
(தொடரும்...)
முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து
முடிவிலாதது,
கற்பதற்காக நேரத்தை
விற்பதில்தான் இருக்கிறது
வியாபாரம்.
உலகம் காண செல்கின்றோம்,
வீட்டு சன்னல் வழியாக இவள்
வாசித்த வாழ்க்கையை,
வாழ்வின் வாசலுக்கு கொண்டு சென்று
அறிவுபெற
அழைத்துச் செல்கிறேன்.
மாங்கனி போல சுவையாய் பேசும் என்
மருமகளுக்கு மதி குறைவு என்கிறாயா?
வந்தாலே வீட்டை ஒளிரச் செய்பவளுக்கு
வாழ்க்கையைக் காட்டப் போகிறாயா?
மதி என்ற பெயரையே
மாற்றச் சொல்லிவிட்டார்
உங்கள் மகன்.
இனி மற்றது பேசி எதற்கு?
சரி, ஆகட்டும்.
ஆகாரம் உண்டு
பிறகு செல் என்றார்.
செவிக்கும் கண்ணுக்கும் உணவு தேடிச்
சென்று கொண்டிருக்கிறோம்.
வயிற்றுக்கு உணவு
வேண்டுமெனில் வந்துவிடுகிறோம்
வீட்டிற்கு என்றான் காதல்.
மதி, நீ
சாப்பிட்டு விட்டுப்போம்மா.
அவன் பசி பொறுப்பான்,
அகிலமே உணவென்பான்,
மழை நனைவான்,
வெயில் சுமப்பான்,
உலகே குடையென்பான்.
வீட்டிற்கு வந்த உன்னை
வெறும் வயிற்றோடு அனுப்ப மாட்டேன்.
அன்னம் பருகிக் கொள், பின்
அனைத்தும் தெரிந்து கொள்.
(தொடரும்...)
முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து
Monday, October 13, 2008
காதல், கானகம் - பகுதி 9
ஊர்காண எங்கள் திருமணமானதும்
உங்கள் கடன் முடிந்தது.
உணவுப் பந்தி முடிந்ததும்
உறவினர்கள் பணி முடிந்தது.
அன்றுதான் எங்கள் பணி
ஆரம்பம் ஆகிறது.
இதில்
பயணிக்கத் தெரியாததில்
பாதி பேர்
வாழ்க்கையை
இரத்து செய்கிறார்கள்
மீதி பேர்
இன்பங்களை
இரத்து செய்கிறார்கள்.
கால் கடுக்க நடக்கப் போகும்
கரடுமுரடான வாழ்க்கைக்கு
காலணிகள் வாங்கச் செல்கின்றோம்.
காலமென்னும ஆழி
கடக்க படகென்னும்
அனுபவம் வேண்டும்
அதற்கான மரம்
தேடச்செல்கின்றோம்.
அனுபவம் நீ கடக்கும்
ஆண்டு பொருத்து அமைவது.
ஒரே நாளில்
அனைத்து அறிவும் பெறுவது
அணுவளவும் நடக்காது
என அனுபவத்தில்
எடுத்துரைத்தார் நாகய்யன்.
அனுபவம் என்பது
அளவிட முடியாத தீ அல்ல,
அது ஒரு சுடர்.
புத்தனுக்கு
போதி மரத்தில் வந்தது
விவேகானந்தனுக்கு
பரமஹம்சரிடம் வந்தது.
உண்மை, நியாயம் என்பது
உள்ளத்தில் நமக்கிருக்கும்
அளவு கோல் பொருத்தது.
அது சரியானதாதுதான்
என எண்ணுவதுதான்
எளிதில் கிடைக்கும் தீர்வு - ஆனால்
சரியான அளவுகோலைத் தேடிச்
செல்வதுதான் சிறப்பு.
பிடிவாதம் என்பதையே
பழக்கமாகக் கொண்டிருக்கிறாய்.
ஏன், எதற்கு என
கேள்வி கேட்பதற்கும்
இடம், பொருள், ஏவல்
இருக்கிறது.
நில்லென உன்னைத்
தடுக்கவில்லை,
நீ அறியாதது அல்ல,
இனியும் என்ன அறியப் போகிறாய்?
(தொடரும்...)
முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து
உங்கள் கடன் முடிந்தது.
உணவுப் பந்தி முடிந்ததும்
உறவினர்கள் பணி முடிந்தது.
அன்றுதான் எங்கள் பணி
ஆரம்பம் ஆகிறது.
இதில்
பயணிக்கத் தெரியாததில்
பாதி பேர்
வாழ்க்கையை
இரத்து செய்கிறார்கள்
மீதி பேர்
இன்பங்களை
இரத்து செய்கிறார்கள்.
கால் கடுக்க நடக்கப் போகும்
கரடுமுரடான வாழ்க்கைக்கு
காலணிகள் வாங்கச் செல்கின்றோம்.
காலமென்னும ஆழி
கடக்க படகென்னும்
அனுபவம் வேண்டும்
அதற்கான மரம்
தேடச்செல்கின்றோம்.
அனுபவம் நீ கடக்கும்
ஆண்டு பொருத்து அமைவது.
ஒரே நாளில்
அனைத்து அறிவும் பெறுவது
அணுவளவும் நடக்காது
என அனுபவத்தில்
எடுத்துரைத்தார் நாகய்யன்.
அனுபவம் என்பது
அளவிட முடியாத தீ அல்ல,
அது ஒரு சுடர்.
புத்தனுக்கு
போதி மரத்தில் வந்தது
விவேகானந்தனுக்கு
பரமஹம்சரிடம் வந்தது.
உண்மை, நியாயம் என்பது
உள்ளத்தில் நமக்கிருக்கும்
அளவு கோல் பொருத்தது.
அது சரியானதாதுதான்
என எண்ணுவதுதான்
எளிதில் கிடைக்கும் தீர்வு - ஆனால்
சரியான அளவுகோலைத் தேடிச்
செல்வதுதான் சிறப்பு.
பிடிவாதம் என்பதையே
பழக்கமாகக் கொண்டிருக்கிறாய்.
ஏன், எதற்கு என
கேள்வி கேட்பதற்கும்
இடம், பொருள், ஏவல்
இருக்கிறது.
நில்லென உன்னைத்
தடுக்கவில்லை,
நீ அறியாதது அல்ல,
இனியும் என்ன அறியப் போகிறாய்?
(தொடரும்...)
முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து
Friday, October 10, 2008
காதல், கானகம் - பகுதி 8
முட்டைக்குள் இருந்து
முழி.
உலகமென்பது
உனது
வீடு ஒன்றே என்பதை
விட்டொழி.
கடல் காண்
காடு காண்
நாடு காண்
நாட்டு மக்கள் காண்
ஜனகனமன... என்பது
தேசிய கீதம்.
முயற்சி, அனுபவம் என்பது
மானுட கீதம்.
பயணத்திற்கு
புறப்படு என்னோடு.
கோமாவிலிருந்து
கண் விழித்தது போன்ற
உணர்வு, இன்னும்
உலகம் என்ன என்பதை
முழுதாய் அறியாததாய் தோன்றும்
முதல் அறிவு.
குச்சி வைத்து நடக்கும்
குருடர்கள் போல்
அவன்
கைப்பிடித்து
கால்கள் நகர்த்தினாள்.
நில்லப்பா,
இரண்டு வாரத்தில் திருமணம்.
இருவரும் எங்கே செல்கிறீர்கள்?
திருமண காரியங்கள்
ஏராளமாய் இருக்கிறது.
பத்திரிகை கொடுத்தது
பாதி பேருக்குத்தான்
மீதி வேலை
மிச்சமிருக்கு.
என்றார் தந்தை நாகய்யன்.
(தொடரும்...)
முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து
முழி.
உலகமென்பது
உனது
வீடு ஒன்றே என்பதை
விட்டொழி.
கடல் காண்
காடு காண்
நாடு காண்
நாட்டு மக்கள் காண்
ஜனகனமன... என்பது
தேசிய கீதம்.
முயற்சி, அனுபவம் என்பது
மானுட கீதம்.
பயணத்திற்கு
புறப்படு என்னோடு.
கோமாவிலிருந்து
கண் விழித்தது போன்ற
உணர்வு, இன்னும்
உலகம் என்ன என்பதை
முழுதாய் அறியாததாய் தோன்றும்
முதல் அறிவு.
குச்சி வைத்து நடக்கும்
குருடர்கள் போல்
அவன்
கைப்பிடித்து
கால்கள் நகர்த்தினாள்.
நில்லப்பா,
இரண்டு வாரத்தில் திருமணம்.
இருவரும் எங்கே செல்கிறீர்கள்?
திருமண காரியங்கள்
ஏராளமாய் இருக்கிறது.
பத்திரிகை கொடுத்தது
பாதி பேருக்குத்தான்
மீதி வேலை
மிச்சமிருக்கு.
என்றார் தந்தை நாகய்யன்.
(தொடரும்...)
முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து
Thursday, October 9, 2008
காதல், கானகம் - பகுதி 7
சரி வா கிளம்பலாம்.
எங்கே கூப்பிடுகிறீர்கள்?
எந்த இடம் எனக்கு
இந்த சொர்க்கத்தை விட
இன்பமாக இருக்கப் போகிறது?
தோளில் தலை சாய்த்து
கரங்களில் கரம் கோர்த்து,
மரத்தில் படர்ந்த
கொடி போல இருக்கும்
கொடி(இடை)யவளே.
வா, நீ கண்டும் காணாமல் விட்டதை
வடிகட்டி காண்பிக்கிறேன்.
இன்னும் கொஞ்ச நேரம்
இருந்துவிட்டுப் போகலாமே!
முட்டைகள்
கோழியின் சூட்டில்
பத்திரமாய் இருப்பது
போன்ற உணர்வு
பித்தாக்கி இருந்தது அவளை.
இத்தனை நாள்
இருந்தது போல்
இனியும் உன்னை
அடைகாத்து வைத்திருக்கப்
போவதில்லை நான்.
நீ வெளிவரும்
நேரம் வந்துவிட்டது.
பெண்கள் பருந்துகள் - ஆனால்
பறக்கத் தெரியாத
பெங்குயின்களாய்
மாற்றப் பட்டிருக்கிறார்கள்.
அனுபவமென்னும்
இறக்கைகளையும்
பறப்பதற்காய்
பயன்படுத்தத் தவறியவர்கள்.
எனது அனுபவத்திலிருந்து
இரண்டு இறக்கைகள்
உனக்காய்த் தருகிறேன் - அது
உன்னுடையதல்ல.
ஆனால் அது காட்டும்
அறிவில் வானம் ஏறலாம்
உலகின் விளிம்புகள் காணலாம்.
உனக்கான
இறக்கைகள்
இறக்குமதியாகும் வரை
முட்டிப் போராடு
முழு நீள வாழ்க்கைக்கு
அனுபவம் ஒன்றுதான்
அவசியம்.
(தொடரும்...)
முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து
எங்கே கூப்பிடுகிறீர்கள்?
எந்த இடம் எனக்கு
இந்த சொர்க்கத்தை விட
இன்பமாக இருக்கப் போகிறது?
தோளில் தலை சாய்த்து
கரங்களில் கரம் கோர்த்து,
மரத்தில் படர்ந்த
கொடி போல இருக்கும்
கொடி(இடை)யவளே.
வா, நீ கண்டும் காணாமல் விட்டதை
வடிகட்டி காண்பிக்கிறேன்.
இன்னும் கொஞ்ச நேரம்
இருந்துவிட்டுப் போகலாமே!
முட்டைகள்
கோழியின் சூட்டில்
பத்திரமாய் இருப்பது
போன்ற உணர்வு
பித்தாக்கி இருந்தது அவளை.
இத்தனை நாள்
இருந்தது போல்
இனியும் உன்னை
அடைகாத்து வைத்திருக்கப்
போவதில்லை நான்.
நீ வெளிவரும்
நேரம் வந்துவிட்டது.
பெண்கள் பருந்துகள் - ஆனால்
பறக்கத் தெரியாத
பெங்குயின்களாய்
மாற்றப் பட்டிருக்கிறார்கள்.
அனுபவமென்னும்
இறக்கைகளையும்
பறப்பதற்காய்
பயன்படுத்தத் தவறியவர்கள்.
எனது அனுபவத்திலிருந்து
இரண்டு இறக்கைகள்
உனக்காய்த் தருகிறேன் - அது
உன்னுடையதல்ல.
ஆனால் அது காட்டும்
அறிவில் வானம் ஏறலாம்
உலகின் விளிம்புகள் காணலாம்.
உனக்கான
இறக்கைகள்
இறக்குமதியாகும் வரை
முட்டிப் போராடு
முழு நீள வாழ்க்கைக்கு
அனுபவம் ஒன்றுதான்
அவசியம்.
(தொடரும்...)
முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து
Wednesday, October 8, 2008
காதல், கானகம் - பகுதி 6
முத்தம் சில வோல்ட்டுகளை
மூளைக்கு அனுப்புகிறது
அதன் விளைவாக
அதிகமாக சுரக்கிறது
எச்சில் திரவம், இதனால் வாயின்
எல்லாப் பகுதியும் சுத்தமாகிறது.
முத்தம் கொடுப்பதால்
முகத்தில் முப்பத்து நான்கு
தசைகளுக்கும் மேல்
இயங்குகிறது.
முகம் முழுக்க
ஏற்படும் இறுக்கம் தளர்ந்து
மூப்பு குறைகிறது.
ஒரு கிலோ எடை
குறைக்க ஆராயிரத்துக்கும்
மேற்பட்ட கலோரிகள்
எரிக்க வேண்டும்.
ஆனால்
பதினைந்து நிமிட
முத்தம் மொத்தம்
முப்பது கலோரிகள்
எரிக்கின்றது.
முத்தத்தினால்
இரத்த ஓட்டம்
அதிகரிக்கிறது
அது மாரடைப்பையும்
தவிர்க்கிறது.
இப்பொழுது சொல்
நமது இளமை கூட்டி
மாரடைப்பைத் தடுக்கும்
முத்தத்தை ஏன்
முடித்தாய்?
முத்தத்தில் இவ்வளவு
சத்தான விஷயங்கள்
இருக்குமென்று தெரியாததால்.
இருப்பினும் இன்றைக்கு
இதுபோதும்!
கேடுகளும் இருக்கிறது
கேட்கிறாயா?
சொல்லுங்கள்.
உதட்டோடு
உதடு சேர்த்து
கொடுக்கும் முத்தத்தினால்
எச்சில் வழியே
சிற்சில நோய்க்
கிருமிகளும் பரவும்.
தெளிந்தாயா?
(தொடரும்...)
முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து
மூளைக்கு அனுப்புகிறது
அதன் விளைவாக
அதிகமாக சுரக்கிறது
எச்சில் திரவம், இதனால் வாயின்
எல்லாப் பகுதியும் சுத்தமாகிறது.
முத்தம் கொடுப்பதால்
முகத்தில் முப்பத்து நான்கு
தசைகளுக்கும் மேல்
இயங்குகிறது.
முகம் முழுக்க
ஏற்படும் இறுக்கம் தளர்ந்து
மூப்பு குறைகிறது.
ஒரு கிலோ எடை
குறைக்க ஆராயிரத்துக்கும்
மேற்பட்ட கலோரிகள்
எரிக்க வேண்டும்.
ஆனால்
பதினைந்து நிமிட
முத்தம் மொத்தம்
முப்பது கலோரிகள்
எரிக்கின்றது.
முத்தத்தினால்
இரத்த ஓட்டம்
அதிகரிக்கிறது
அது மாரடைப்பையும்
தவிர்க்கிறது.
இப்பொழுது சொல்
நமது இளமை கூட்டி
மாரடைப்பைத் தடுக்கும்
முத்தத்தை ஏன்
முடித்தாய்?
முத்தத்தில் இவ்வளவு
சத்தான விஷயங்கள்
இருக்குமென்று தெரியாததால்.
இருப்பினும் இன்றைக்கு
இதுபோதும்!
கேடுகளும் இருக்கிறது
கேட்கிறாயா?
சொல்லுங்கள்.
உதட்டோடு
உதடு சேர்த்து
கொடுக்கும் முத்தத்தினால்
எச்சில் வழியே
சிற்சில நோய்க்
கிருமிகளும் பரவும்.
தெளிந்தாயா?
(தொடரும்...)
முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து
Tuesday, October 7, 2008
காதல், கானகம் - பகுதி 5
காதல் என்றாலே
கற்பனை ஊற்று
பொங்கி விடுகிறது உங்களுக்கு.
உண்மை.
காதலின்றி எது இயங்கும்?
சூரியனின் மேல்
சூழ்ந்திருக்கும் காதலால்தான்
கிரகங்கள் சுற்றுகின்றன.
உலகின் மீது
நிலா கொண்ட காதலால்தான்
நீள இரவிற்கு ஒரு வெளிச்சம்.
தேன் மீதுள்ள
வண்டின் காதலால்தான்
மகரந்தச் சேர்க்கை.
அறிவியல் சொன்னால்
நியூட்ரான் மீது
ப்ரோட்டானும்
எலக்ட்ரானும்
கொண்ட காதல்தான்
அணு.
காதல் என்பது
உண்மையில்
உடம்பில் ஏற்படும்
இரசாயன மாற்றம்.
எல்லாமே
இரசாயன மாற்றம்தானா?
ஏன் இவ்வளவு
தெரிந்து வைத்திருக்கிறீர்கள்?
பொய்யாக கடிந்து கொண்டாள்.
அருகில் வந்தாள்
அணைத்தாள்
கன்னத்தில் சிறிது நேரம் உதடொட்டி
கனிமுத்தம் கொடுத்தாள் பின்
தோள்களில் சாய்ந்துகொண்டாள்.
அதற்குள் ஏன்
நிறுத்திவிட்டாய்?
கண்ணே!
கணக்கிலடங்கா
பரிசுப் பொருட்களெல்லாம்
பெரிதல்ல ஒரு
முத்தத்தை கொடுக்கும்பொழுது.
அப்பாடா,
அறிவியல் விட்டு
வெளிவந்தீர்களா!
இல்லை
அறிவியல் தான்
வாழ்க்கை.
வாழ்க்கையை விட்டுவிட்டு
வாழ்வதெப்படி?
நீ கொடுத்த
அன்பு முத்தத்தின்
அறிவியல் அறிவாயா?
சொல்கிறேன் கேள்.
(தொடரும்...)
முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து
கற்பனை ஊற்று
பொங்கி விடுகிறது உங்களுக்கு.
உண்மை.
காதலின்றி எது இயங்கும்?
சூரியனின் மேல்
சூழ்ந்திருக்கும் காதலால்தான்
கிரகங்கள் சுற்றுகின்றன.
உலகின் மீது
நிலா கொண்ட காதலால்தான்
நீள இரவிற்கு ஒரு வெளிச்சம்.
தேன் மீதுள்ள
வண்டின் காதலால்தான்
மகரந்தச் சேர்க்கை.
அறிவியல் சொன்னால்
நியூட்ரான் மீது
ப்ரோட்டானும்
எலக்ட்ரானும்
கொண்ட காதல்தான்
அணு.
காதல் என்பது
உண்மையில்
உடம்பில் ஏற்படும்
இரசாயன மாற்றம்.
எல்லாமே
இரசாயன மாற்றம்தானா?
ஏன் இவ்வளவு
தெரிந்து வைத்திருக்கிறீர்கள்?
பொய்யாக கடிந்து கொண்டாள்.
அருகில் வந்தாள்
அணைத்தாள்
கன்னத்தில் சிறிது நேரம் உதடொட்டி
கனிமுத்தம் கொடுத்தாள் பின்
தோள்களில் சாய்ந்துகொண்டாள்.
அதற்குள் ஏன்
நிறுத்திவிட்டாய்?
கண்ணே!
கணக்கிலடங்கா
பரிசுப் பொருட்களெல்லாம்
பெரிதல்ல ஒரு
முத்தத்தை கொடுக்கும்பொழுது.
அப்பாடா,
அறிவியல் விட்டு
வெளிவந்தீர்களா!
இல்லை
அறிவியல் தான்
வாழ்க்கை.
வாழ்க்கையை விட்டுவிட்டு
வாழ்வதெப்படி?
நீ கொடுத்த
அன்பு முத்தத்தின்
அறிவியல் அறிவாயா?
சொல்கிறேன் கேள்.
(தொடரும்...)
முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து
Monday, October 6, 2008
காதல், கானகம் - பகுதி 4
ஆதிக்கு துணையில்லை
அது பெருகிப் பிரியும்,
பிரிந்து பெருகும்,
புணர்ந்து மாறும்,
மாறிப் புணரும்.
புரியவில்லை,
பெருகியது என்றால், ஒன்றிலிருந்து
எங்கனம் இத்தனை உயிர்கள் வந்தது?
சொல்கிறேன் கேள்.
பத்தில் ஐந்து கழிந்தால், மீதம் ஐந்து.
ஆனால் ஏழு கழிந்தால் மீதம் மூன்று.
இது போன்று கழிந்தும், பின்
புணர்ந்தும், பிரிந்தும், பெருகியும்
விளைந்ததுதான் உயிர்கள்.
புரிந்ததா?
புரிவது போல் இருந்தாலும்,
புரியாதது போலும் தோன்றுகிறது.
அறிவியலை உங்களோடு நிறுத்துங்கள்,
ஆண்டவன் என்று கூறினால்தான்
எனக்கு சட்டென்று புரியும்.
பேதையே,
நீ கூறும் கடவுளின் உட்பொருள்தான்
நான் கூறும் துளிகள்.
..ம்.....ம் போதும், போதும் - என்னைக்
காதலிக்க ஆரம்பித்தப் பிறகு
காதல் என்று நீங்கள்
பெயர்மாற்றிக் கொண்டது போல்,
மதியை ஆதவள் என
மாற்றிக் கொள்கிறேன், போதுமா?
ஆம். அதுதான் சரி,
திருமணம் என்பது
தித்திக்கும் புதுவாழ்வு.
புதுப்பெயர் சூட்டிக் கொள்வதில்
புதிர் என்ன இருக்கிறது?
காதல், காதல் என்று எத்தனையோ
காவியங்கள் வந்தும், காதலென்ற
பெயரை அவனியில் யாருமே வைத்ததில்லை.
நீங்கள்தான் வைத்திருக்கிறீர்கள்.
அதில் ஒரு சிறப்பு கேள்,
காதல் எனும் வார்த்தை
களம் கண்டு மாறுபடும் - ஆனால்
உணர்வு வழியே ஒன்றுபடும்.
பெற்றோர் பிள்ளையிடம் பேசுவதும் அதுவே,
சகோதரத்துவத்தில் சிறப்பதும் அதுவே,
நட்பிலே நனைவதும் அதுவே,
மணத்தில் மனப்பதும் அதுவே.
(தொடரும்...)
முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து
அது பெருகிப் பிரியும்,
பிரிந்து பெருகும்,
புணர்ந்து மாறும்,
மாறிப் புணரும்.
புரியவில்லை,
பெருகியது என்றால், ஒன்றிலிருந்து
எங்கனம் இத்தனை உயிர்கள் வந்தது?
சொல்கிறேன் கேள்.
பத்தில் ஐந்து கழிந்தால், மீதம் ஐந்து.
ஆனால் ஏழு கழிந்தால் மீதம் மூன்று.
இது போன்று கழிந்தும், பின்
புணர்ந்தும், பிரிந்தும், பெருகியும்
விளைந்ததுதான் உயிர்கள்.
புரிந்ததா?
புரிவது போல் இருந்தாலும்,
புரியாதது போலும் தோன்றுகிறது.
அறிவியலை உங்களோடு நிறுத்துங்கள்,
ஆண்டவன் என்று கூறினால்தான்
எனக்கு சட்டென்று புரியும்.
பேதையே,
நீ கூறும் கடவுளின் உட்பொருள்தான்
நான் கூறும் துளிகள்.
..ம்.....ம் போதும், போதும் - என்னைக்
காதலிக்க ஆரம்பித்தப் பிறகு
காதல் என்று நீங்கள்
பெயர்மாற்றிக் கொண்டது போல்,
மதியை ஆதவள் என
மாற்றிக் கொள்கிறேன், போதுமா?
ஆம். அதுதான் சரி,
திருமணம் என்பது
தித்திக்கும் புதுவாழ்வு.
புதுப்பெயர் சூட்டிக் கொள்வதில்
புதிர் என்ன இருக்கிறது?
காதல், காதல் என்று எத்தனையோ
காவியங்கள் வந்தும், காதலென்ற
பெயரை அவனியில் யாருமே வைத்ததில்லை.
நீங்கள்தான் வைத்திருக்கிறீர்கள்.
அதில் ஒரு சிறப்பு கேள்,
காதல் எனும் வார்த்தை
களம் கண்டு மாறுபடும் - ஆனால்
உணர்வு வழியே ஒன்றுபடும்.
பெற்றோர் பிள்ளையிடம் பேசுவதும் அதுவே,
சகோதரத்துவத்தில் சிறப்பதும் அதுவே,
நட்பிலே நனைவதும் அதுவே,
மணத்தில் மனப்பதும் அதுவே.
(தொடரும்...)
முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து
Friday, October 3, 2008
காதல், கானகம் - பகுதி 3
காலைச் சூரியனின்
குவளை வெளிச்சத்திலும்
வெளிச்சம் பரவாத அறையின்
வாயில் திறந்தான்.
செவ்வான மேகம் போல
செவ்விதழில் கோபம்.
இளஞ்சூரியனின் வெப்பமொத்து
இசைப்பது போலவே கேட்டாள்
"இவ்வளவு நேரம் ஏன்?".
அடியேய்,
மதி நீ இல்லாமல் போனதால்,
மதியின்றிப் போனேன்.
சாவித் துவராம்
வழியே வந்த உன் மதி கொண்டுதான்
வாயில் திறக்க வந்தேன்.
காதல், காதல் என்று கூப்பிட்டது
காதில் விழவில்லையா?
இன்னும் சற்று நேரம் நீ கூப்பிடுவாயென்று
எண்ணியே சிலையாய் இருந்தேன்.
ஆரம்பித்து விட்டீர்கள்!
என்று கூறி உள்ளே வந்தவள்,
நீங்கள் பித்து பிடித்து போயிருக்கிறீர்கள்,
மதி அழைப்பதும் புரியாத வண்ணம்
மயக்கத்திலேயே இருக்கிறீர்கள் என்றாள்.
மதி என்று உனக்கு யாரடி
பெயர் வைத்தது?
பெண், சூரியன்.
பல காலமாய் வந்தாலும்
ஒவ்வொரு வருகையும்
ஒரு வரம்தானடி.
பெண்ணே
நீ பேசும் பொழுது
இளஞ் சூரியன்,
கோபம் கொண்டால்
பக்கச் சூரியன்,
காதல் கொண்டால்
மாலைச் சூரியன்.
ஆண்
பூமி போன்றவன்.
பெண் இருக்கும் இடத்தில்
அன்பு வெளிச்சத்தில்,
தழைத்து வாழ்கின்றான்.
தான் பெறும்
வெற்றியிலும், தோல்வியிலும்
பின்னாலும், முன்னாலும்
பெண்ணை வைத்துக் கொள்கிறான்
மேலும் கேள்,
சூரியனிலிருந்து பிறந்ததுதான் பூமி
பூமியிலிருந்து பிரிந்ததுதான் நிலா
சிறிது நிறுத்துங்கள். அப்படியானால்
சூரியனின் துணைவன் யார்?
(தொடரும்...)
முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து
குவளை வெளிச்சத்திலும்
வெளிச்சம் பரவாத அறையின்
வாயில் திறந்தான்.
செவ்வான மேகம் போல
செவ்விதழில் கோபம்.
இளஞ்சூரியனின் வெப்பமொத்து
இசைப்பது போலவே கேட்டாள்
"இவ்வளவு நேரம் ஏன்?".
அடியேய்,
மதி நீ இல்லாமல் போனதால்,
மதியின்றிப் போனேன்.
சாவித் துவராம்
வழியே வந்த உன் மதி கொண்டுதான்
வாயில் திறக்க வந்தேன்.
காதல், காதல் என்று கூப்பிட்டது
காதில் விழவில்லையா?
இன்னும் சற்று நேரம் நீ கூப்பிடுவாயென்று
எண்ணியே சிலையாய் இருந்தேன்.
ஆரம்பித்து விட்டீர்கள்!
என்று கூறி உள்ளே வந்தவள்,
நீங்கள் பித்து பிடித்து போயிருக்கிறீர்கள்,
மதி அழைப்பதும் புரியாத வண்ணம்
மயக்கத்திலேயே இருக்கிறீர்கள் என்றாள்.
மதி என்று உனக்கு யாரடி
பெயர் வைத்தது?
பெண், சூரியன்.
பல காலமாய் வந்தாலும்
ஒவ்வொரு வருகையும்
ஒரு வரம்தானடி.
பெண்ணே
நீ பேசும் பொழுது
இளஞ் சூரியன்,
கோபம் கொண்டால்
பக்கச் சூரியன்,
காதல் கொண்டால்
மாலைச் சூரியன்.
ஆண்
பூமி போன்றவன்.
பெண் இருக்கும் இடத்தில்
அன்பு வெளிச்சத்தில்,
தழைத்து வாழ்கின்றான்.
தான் பெறும்
வெற்றியிலும், தோல்வியிலும்
பின்னாலும், முன்னாலும்
பெண்ணை வைத்துக் கொள்கிறான்
மேலும் கேள்,
சூரியனிலிருந்து பிறந்ததுதான் பூமி
பூமியிலிருந்து பிரிந்ததுதான் நிலா
சிறிது நிறுத்துங்கள். அப்படியானால்
சூரியனின் துணைவன் யார்?
(தொடரும்...)
முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து
Thursday, October 2, 2008
காதல், கானகம் - பகுதி 2
அப்பொழுதுதான் தியானத்தில்
அவன் அமர்ந்தான்;
கதவு தட்டும்
காதலி சத்தத்தில்
கண் விழித்தான்.
வந்துவிட்டாள் என் காதல் தேவதை,
வழியெல்லாம் வர்ணம் பொழிந்து.
வீட்டு வாசலின் ரங்கோலிக் கோலம்
வீதி கடந்து போயிருக்கும், இவள்
வர்ணம் கண்டு!
என்ன செய்கின்றாய்?
எனும் செல்லக் கோபமும்,
கதவைத் திற எனும்
காந்தக் கட்டளையும்,
"நான் மதி வந்திருக்கேன்" எனும்
நாதம் கேட்டும்,
சிலையாகவே இருந்தான்.
நிலவின் மறுமொழி
மதி அவள் பெயர்.
அவள் ஒரு
அன்னம்.
மாநிறத்தில் மின்னும்
22 காரட் தங்கம்.
பேச்சிலே
பழக்கத்திலே
ஒரு குழந்தை.
காதலிக்கிறேன் என்பதை
கண்ணியமாக உரைத்தவள்.
தூறலாய் அன்பு பொழியும்
தேவதைகளில் ஒருத்தி.
மண்ணில் காதல் செய்த
புண்ணியங்களின்
ஒட்டுமொத்தப் பலன்.
பசும்பாலின் தூய்மை அவளது
பளிங்கு மேனி,
குடிபெயரும் அவளது
குவிந்தவாய் வார்த்தைகள்
குளிர் வாடைக் காற்று.
அவள்
பல நேரம் அவன் சேய்
சில நேரம் அவன் தாய்
இப்போதைக்கு அவனது
இரண்டு வருடக் காதலி,
இன்னும்
இரண்டு வாரத்தில் மனைவி.
(தொடரும்...)
முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து
அவன் அமர்ந்தான்;
கதவு தட்டும்
காதலி சத்தத்தில்
கண் விழித்தான்.
வந்துவிட்டாள் என் காதல் தேவதை,
வழியெல்லாம் வர்ணம் பொழிந்து.
வீட்டு வாசலின் ரங்கோலிக் கோலம்
வீதி கடந்து போயிருக்கும், இவள்
வர்ணம் கண்டு!
என்ன செய்கின்றாய்?
எனும் செல்லக் கோபமும்,
கதவைத் திற எனும்
காந்தக் கட்டளையும்,
"நான் மதி வந்திருக்கேன்" எனும்
நாதம் கேட்டும்,
சிலையாகவே இருந்தான்.
நிலவின் மறுமொழி
மதி அவள் பெயர்.
அவள் ஒரு
அன்னம்.
மாநிறத்தில் மின்னும்
22 காரட் தங்கம்.
பேச்சிலே
பழக்கத்திலே
ஒரு குழந்தை.
காதலிக்கிறேன் என்பதை
கண்ணியமாக உரைத்தவள்.
தூறலாய் அன்பு பொழியும்
தேவதைகளில் ஒருத்தி.
மண்ணில் காதல் செய்த
புண்ணியங்களின்
ஒட்டுமொத்தப் பலன்.
பசும்பாலின் தூய்மை அவளது
பளிங்கு மேனி,
குடிபெயரும் அவளது
குவிந்தவாய் வார்த்தைகள்
குளிர் வாடைக் காற்று.
அவள்
பல நேரம் அவன் சேய்
சில நேரம் அவன் தாய்
இப்போதைக்கு அவனது
இரண்டு வருடக் காதலி,
இன்னும்
இரண்டு வாரத்தில் மனைவி.
(தொடரும்...)
முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து
Wednesday, October 1, 2008
காதல், கானகம் - பகுதி 1
என் அன்பிற்கினிய நண்பர்களே, ஏறத்தாழ இந்தக் கவிதையை எழுதி 7 மாதங்கள் தாண்டிவிட்டன. ஒரு முழு நீளக் கவிதையாய் இதை அளித்த அன்று பகுதி பகுதியாக இட்டால் வாசிப்பது எளிது என்று பலர் கருத்துக் கூறினர். அதன் பொருட்டு அன்று எழுதிய அந்தக் கவிதையை எந்த மாறுபாடுமின்றி, சில எழுத்துப் பிழைகளை மட்டுமே திருத்தி அனுப்புகிறேன். இது மொத்தத்தில் 46 பகுதிகளாக வெளிவரும். தினமும் ஒன்று வீதம் மொத்தம் 46 நாட்களில் முடிந்துவிடும். இதில் சனி, ஞாயிறு, வேறு ஏதேனும் அவசர நிலை தவிர்த்து இதர நாட்களில் தொடரும். ஏற்கனவே எழுதி வைத்து விட்டதால், இதில் இடையூறு ஏதுமிருக்காது என நம்புகிறேன்.
இதில் எழுத்துப் பிழைகள், ஒரு கருத்து முன்னரும் பின்னரும் முரண்படுவது போல எழுதியிருந்தால் தயவு கூர்ந்து தெரியப் படுத்துங்கள். நன்றி.
காதல், கானகம் - பகுதி 1
காதல்.....காதல்.....
கதவு வழியே வரும்
அழைப்பு ஓசை....
காட்டை ஆளும்
கலியுகத்து இராமன்.
பொது அறிவுகளில்
புதைந்தவன்.
தரணியில் தனக்கென
தனி உலகம் கொண்டவன்.
காடுகளை
கடுமையாக நேசிப்பவன்.
மானுடம் மறந்தவர்களை
மனிதத்தோடு விமர்சிப்பவன்.
மனிதர்களையும்
மிருகங்களையும்
ஒருங்கே நேசிப்பவன்.
அன்பு என்பதின்
அடைமொழி இவன்.
பிறப்பதறியாமல் பிறந்து
பிணம்தின்னிக் கழுகளாய்
பணம் ஈட்டி
பின்னொரு நாளில் இறக்கும்
பாவி மனிதனாய் வாழ்வதிலென்ன பயன்?
என்றெண்ணுபவன்.
சந்ததியினருக்கு
சொத்து சேர்க்காதவன்
ஆதரவற்ற குழந்தைகளுக்கும்
அனாதையாக்கப் பட்ட
சில பெற்றோர்களுக்கும்
சில காலமாக
இவன் ஒரு தாய்.
"இனிய இல்லம்"
இத்தகு சொர்க்கத்திற்கு
இவன் தந்தையிட்ட பெயர்.
குழந்தை பிறந்ததும்
அழுவது பிள்ளையாகத்தான்
இருக்கவேண்டும்
வேறு யாராகவும் இருக்கக் கூடாது.
ஒருவன் இறக்கும் பொழுது
அழுவது சமுதாயமாக இருக்க வேண்டும்
அவனாக இருக்கக்கூடாது.
இவன் இறந்தால்
கண்ணீர் வடிக்க
ஆயிரம் பேர் இருக்கிறார்கள்
அதுவே அவன் சொத்து.
அறிவுமதி
அவனது உண்மைப் பெயர்.
காதலி மதி மீது
கொண்ட காதலால்
காதல் என
பெயர் மாற்றிக் கொண்டவன்.
(தொடரும்....)
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து
இதில் எழுத்துப் பிழைகள், ஒரு கருத்து முன்னரும் பின்னரும் முரண்படுவது போல எழுதியிருந்தால் தயவு கூர்ந்து தெரியப் படுத்துங்கள். நன்றி.
காதல், கானகம் - பகுதி 1
காதல்.....காதல்.....
கதவு வழியே வரும்
அழைப்பு ஓசை....
காட்டை ஆளும்
கலியுகத்து இராமன்.
பொது அறிவுகளில்
புதைந்தவன்.
தரணியில் தனக்கென
தனி உலகம் கொண்டவன்.
காடுகளை
கடுமையாக நேசிப்பவன்.
மானுடம் மறந்தவர்களை
மனிதத்தோடு விமர்சிப்பவன்.
மனிதர்களையும்
மிருகங்களையும்
ஒருங்கே நேசிப்பவன்.
அன்பு என்பதின்
அடைமொழி இவன்.
பிறப்பதறியாமல் பிறந்து
பிணம்தின்னிக் கழுகளாய்
பணம் ஈட்டி
பின்னொரு நாளில் இறக்கும்
பாவி மனிதனாய் வாழ்வதிலென்ன பயன்?
என்றெண்ணுபவன்.
சந்ததியினருக்கு
சொத்து சேர்க்காதவன்
ஆதரவற்ற குழந்தைகளுக்கும்
அனாதையாக்கப் பட்ட
சில பெற்றோர்களுக்கும்
சில காலமாக
இவன் ஒரு தாய்.
"இனிய இல்லம்"
இத்தகு சொர்க்கத்திற்கு
இவன் தந்தையிட்ட பெயர்.
குழந்தை பிறந்ததும்
அழுவது பிள்ளையாகத்தான்
இருக்கவேண்டும்
வேறு யாராகவும் இருக்கக் கூடாது.
ஒருவன் இறக்கும் பொழுது
அழுவது சமுதாயமாக இருக்க வேண்டும்
அவனாக இருக்கக்கூடாது.
இவன் இறந்தால்
கண்ணீர் வடிக்க
ஆயிரம் பேர் இருக்கிறார்கள்
அதுவே அவன் சொத்து.
அறிவுமதி
அவனது உண்மைப் பெயர்.
காதலி மதி மீது
கொண்ட காதலால்
காதல் என
பெயர் மாற்றிக் கொண்டவன்.
(தொடரும்....)
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து
Subscribe to:
Posts (Atom)