
பத்துநிமிடம்
~~~o~0~o~~~
அடர்ந்த வாகனப் புகையும்
அடங்காத நகர ஒலியும்
நீர்த்துப் போகும்
நீண்ட புல்வெளியில்
பத்து நிமிடமாவது
படுத்துக்கிட, பசுமையான நினைவுகளோடு!

நினைவிலிட்டுக்கொள்
~~~o~0~o~~~
பகலவனின் கதிர்கள்
பாதம் உரசும்முன்
விழித்தெழுந்து
விண்ணில் மறையவிருக்கும்
விண்மீன்களுக்கு வணக்கம்
சொல்லிவிட்டு இன்றைய
செயல்களை நினைவிலிட்டுக்கொள்!
0 comments:
Post a Comment