
புன்னகை செய்!
~~~~~o~0~o~~~~~
வானத்தில் வண்ணவில்,
வயக்காட்டில் நிறைந்த நெல்மணிகள்,
குழந்தையின் சிரிப்பு,
பழுத்து உதிரும் இலை,
இவையாவும் கடக்கும்போது
இதழோரத்தில் புன்னகை செய்!

நடந்து பழகு
~~~~~o~0~o~~~~~
மடியின் கணினியில் உலகமும்
கையடக்க பேசியில் சுற்றமும்
குளிரூட்டி அறையில் வானமும்
சுருங்கிப் போன வாழ்க்கையில்
நண்பனுடன் சுகமாய் முப்பது
நிமிடமாவது நடந்தால் நன்று!
0 comments:
Post a Comment