என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

Tuesday, April 28, 2009

காதல், கானகம் - பகுதி 35

அய்யா ஓடிடுங்க
அசெளகரியமான குரல்.
சட்டென்று அந்த
சத்தமும் நின்று விட்டது.

ஏதோ தவறாக நடக்கிறது
என்பதை காதல் உணருமுன்னே
துப்பாக்கிகளுடன்
தீவிரவாதிகள் போல சிலர்
சுற்றி வளைத்தனர்.

வெளிச்சத்திற்கு
ஆசைப்பட்ட ஈசல் போல்,
தூண்டில் புழுவுக்கு
ஆசைப்பட்ட மீனைப் போல்,
எலிப்பொறி உணவிற்கு
ஆசைப்பட்ட எலியைப் போல்
ஆயிற்று மதியின் மனது.

கடுகளவும் அச்சமென்பதறியாத
காதல் மனது கனத்தது.
காதலியை வற்புறுத்தி
அழைத்துவந்து
மீளாக் குழியில்
தள்ளினோமோவென்று
துன்பத்தில் தத்தளித்தான்.

கடலில் மூழ்கியவன்
கடைசி மூச்சை
இறப்பின் தருவாயில்
இழுப்பது போல
தைரியத்தை மனதில்
தரித்துக் கொண்டான்.

முதுகுக்குப் பின்
மதியை நிறுத்திக் கொண்டு
இருகரமும் காதலியை
இரும்பு அறை போல்
சுற்றி வைத்துக் கொண்டான்.
இறப்பென்று
ஒன்று வந்தாலும்
வருவது எனக்காக
இருக்கட்டும் முதலில்
என எண்ணினான்.

பயத்தின் காட்சிதனை
சுயத்தில் பார்த்ததும்
கண்களில் அப்பதிவுகளை
கடைசி சொட்டு வரை அழித்தான்.
கேட்டான்,
யார் நீங்கள்?


(தொடரும்...)

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

0 comments:

இங்கே கண்தடம் பதித்தவர்கள்

நாட்காட்டி

தமிழ்வெளி

More than a Blog Aggregator

தமிழ் கணிமை

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

Thiratti.com

அதிகாலை

Instant dynamic Tamil News Portal