என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

Monday, March 30, 2009

வானம் பெரிது

வீழ்வதென்று எதுவுமில்லை
மேடு எது பள்ளமெதுவென்று
வானில் தெரியும்வரை
துவண்டு போக எதுவுமில்லை
வெற்றி எது தோல்வியெதுவென்று
சரித்திரம் சொல்லும்வரை
வெற்றிகளும் மகுடங்களும்
ஏழ்மையிலிருந்தே வந்தவை
தங்கக் காசும் பட்டறையில் பிறந்ததுவே!
இங்கே காண்பதுயாவும்
மாயை ஒன்றே
பிரபஞ்சத்தின் புள்ளிகளில் உலகுமொன்றே!
நம் சரித்திரமே
அழிந்து போகும் ஆவணமே
இதற்கு போட்டியெதற்கு? பொய்யெதற்கு?
பசி ஒன்றே நிரந்தரம்
உழைப்பதொன்றே சுக வரம்
உண்மையறிந்தால் வாழ்வு சுகம்பெறும்

3 comments:

பூங்குழலி said...

இப்ப தான் இணையம் பக்கம் வழி தெரிஞ்சுதா ?உங்கள் காதல் கானகம் தொடரை காண ஆவலாக இருக்கிறோம்..............

இரசிகை said...

nllaathaan kirukki irukkeenga...

ஒளியவன் said...

உங்களது பாராட்டுதலுக்கு மிக்க நன்றி.

இங்கே கண்தடம் பதித்தவர்கள்

நாட்காட்டி

தமிழ்வெளி

More than a Blog Aggregator

தமிழ் கணிமை

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

Thiratti.com

அதிகாலை

Instant dynamic Tamil News Portal