என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

Tuesday, June 17, 2008

சோதனைச் சாவடி

சின்னஞ்சிறிய
சோற்றுருண்டைக்காக
கூட்டமிடும் காக்கைகள் போல
எப்பொழுதாவது வந்துவிடும்
ஒற்றைப் பேருந்துக்காக
நிரம்பி வழிகிறது பேருந்து
நிறுத்தம்.

என்னை யாரோ
எத்தனித்துப் பார்ப்பது
போன்ற உணர்வு.

திரும்பினேன்,
கண்களில் ஈரமில்லாத
ஒரு பார்வை,
சிரிப்பினில் அன்பு
இல்லாத ஒரு வெறுமை,
காமம் தூண்டும்
கண்கள் சிமிட்டி
நின்றது இறுதியில்,
அறிமுகமில்லாத என்னை
அழைப்பதற்கான சமிக்ஞை,
என்னிடம் இருக்கும்
ஏதோ ஒன்றை
நோட்டமிடுவதாக ஓருணர்வு,
அது என் சட்டைப் பை!

அவளது சிவப்பு நிற
சேலையும் அவளது
செயலும் சொல்லியது
அவள் சிவப்புவிளக்கின்
அந்தப்புர மகாராணியென்று.

சூழ்நிலைகள் இதற்குச்
சாதகமெனினும் அவள்
மீதான பரிதாபம்
மட்டுமே தலைதூக்கியது.
சிந்தித்த நொடிகள்
சில கடந்து போக
மீண்டும் ஒரு
முறை திரும்பிப் பார்த்தேன்.

அவளது வியாபரத்திற்கு
அன்று சிக்கிய
ஒருவரிடம் ஒய்யாரமாய்
பேசிக் கொண்டிருந்தாள்.

1 comments:

அகரம் அமுதா said...

////சின்னஞ்சிறிய
சோற்றுருண்டைக்காக
கூட்டமிடும் காக்கைகள் போல
எப்பொழுதாவது வந்துவிடும்
ஒற்றைப் பேருந்துக்காக
நிரம்பி வழிகிறது பேருந்து
நிறுத்தம்.////


இக்கவிதை வரிகள் எதார்த்தத்தைப் பிரதிபளிப்பதாக உள்ளது. வாழ்த்துக்கள்.

இங்கே கண்தடம் பதித்தவர்கள்

நாட்காட்டி

தமிழ்வெளி

More than a Blog Aggregator

தமிழ் கணிமை

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

Thiratti.com

அதிகாலை

Instant dynamic Tamil News Portal